About Me

My photo
Tirunelveli/Chennai, TamilNadu, India
நான் நானாக இருகிறேன்.....!

Wednesday, April 27, 2011

பிடித்த நல்ல வாக்கியங்கள்..!


மனிதன் தானாகக் பிறக்கவில்லை; அதனால் அவன் தனக்காக வாழக் கூடாதவன்.
--தந்தை பெரியார்

நீ சொல்லுவதை மற்றவர்கள் ஏற்க மறுக்கலாம்; ஆனால் நீ நினைத்ததைச் சொல்லுவதற்கு உனக்கு உரிமை உண்டு.
--வால்டர்.

அன்பு கலாக்காமல் தரப்படும் உணவு சுவைக்காது; அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.
--கலில் கிப்ரான்

உங்களுக்கு எதை செய்யக்கூடாது என்று தோன்றுகிறதோ அதை பிறருடன் சேர்ந்து செய்யாதீர்கள்.
--சன்பூஷியஸ்

உலகை மாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்; ஆனால் எவரும் தன்னைத் திருத்திக் கொள்ள விரும்புவதில்லை.
--லியோ டால்ஸ்டாய்

எதிர்காலம் பற்றி எண்ணாதே; அது தானாக வரக்கூடியது.
--ஜான்சன்

மனிதன் எப்படிப் பிறந்தான் என்பதைக் பற்றி கவலை இல்லை; எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம்.
--டாக்டர் ஜான்சன்

கடந்த காலத்தை மாற்றியமைக்க இறைவனுக்குக்கூட சக்தி கிடையாது.
--டிரைடன்

மனிதன் செலவழிப்பதிலேயே மதிப்பு வாய்ந்தது நேரம்.

மற்றவர்கள் செய்கின்ற தவறுகளை நீ செய்யாதே; நீயே சொந்தமாகச் செய்.
--பெர்னார்ட்ஷா

அழகிய முகம், பாதி வரதட்சிணைக்குச் சமம்.
--ஜெர்மானியப் பழமொழி

நம்மைத் தவிர, வேறு எவராலும் நமக்கு அமைதியைத் தேடித்தர முடியாது.
--எமர்சன்

மனிதன் இறப்ப்தற்காகப் பிறக்கிறான்; ஆனால், என்றும் வாழ்வதற்காக இறக்கிறான்.

இருள் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள், இருள் வந்தால் தான் நட்சத்திரங்களை ரசிக்க முடியும்.
--சார்லன்-டி-விவர்ட்

வளமான காலத்தில் மற்றவர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள்; வறுமை காலத்தில் நாம் மற்றவர்களை தெரிந்து கொள்கிறோம்.

தவறுக்கு நாம் கொடுக்கும் பெயர்தான் அனுபவம்.
--ஆஸ்கர் ஒயில்ட்

மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல, விடா முயற்சியால்தான்.
--எடிசன்

முடியாது என்று நீ சொன்ன எல்லாம் யாரே ஒருவன் எங்கோ செய்து கொண்டு இருக்கிறான்.
--டாக்டர் கலாம்

1. வதந்தி பேசாதீர்கள். அந்த நேரங்களில் மெலிதாய் புன்னகையுங்கள். புன்னகைத்துக் கொண்டே நடையை கட்டுங்கள்

2. உங்கள் அருகில் வம்பு பேச உங்களுக்கு கீழ்உள்ளர்களை அனுமதிக்காதிர்கள்

3. அடுத்தவரின் உணர்வுகளை அங்கீகரியுங்கள்

4. மற்றவரின் கருத்துக்களை மதித்து கேளுங்கள்

5. அவர்கள், குரலை உயர்த்திக் கருத்து சொல்ல அனுமதியுங்கள்

6. எதிராளி முட்டாள்தனமாய் பேசினாலும், அவர் புத்திசாலிதனமாக பேசுவது போல் உற்று கேளுங்கள்

7. மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களால் உங்கலுக்கு பாதிப்பு இல்லையென்றால் அதை ஒப்புக்கொள்ளுங்கள்

8. யாருடைய சுயமரியாதைக்கும் சவால் விடாதீர்கள்

9. எதிராளியுடனான பேச்சில் உங்களுக்கு பயங்கர கோபம் ஏற்பட்டால் உடனே அந்த இடத்தை விட்டு விரைந்து விடுங்கள்

10. உண்மை எல்லா இடங்களில் உதாவது என்பதை உணருங்கள்

11. மற்றவரிகளின் தகுதியை எடை போடாதீர்கள். அது பெரும்பாலும் தவறாக இருக்கும்

12. எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருப்பதாக காட்டி கொள்ளுங்கள்

13. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

14. அந்தரங்கமான விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

15. ஒருவரைப் பற்றிய உங்களின் அபிப்பிராயத்தை எக்காரணம் கொண்டும் அடுத்தவரிடம் சொல்லாதீர்கள்

16. மற்றவர்களை புகழ்வதற்கென்று தினமும் நேரம் ஒதுக்குங்கள்

17. தாழ்வு மனப்பான்மையுடன் எந்த செயலையும் அனுகாதிர்கள்

18. கிண்டல் மற்றும் கெட்டவார்த்தைகளை உச்சரிப்பதை தவிருங்கள்

19. முக்கியமான விசயங்களை பேசுவதற்கு முன்பு கொஞ்சநேரம் ரிலாக்ஸ் செய்யுங்கள்

20. உங்கள் எதிர்கால லட்சியத்தை பற்றி வாய்விட்டு அதிகமாக பேசாதீர்கள்

21. உங்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதாவது ஒரு நோக்கமிருக்கும் என்று மற்றவர்களை நம்ப செய்யுங்கள்

22. எதிராளி எப்படி பதில் பேசுவான் என்பதை கற்பனையில் சொல்லிப் பாருங்கள்

23. குற்றச்சாட்டை பகிரங்கப்படுத்தாதீர்கள்

24. கொஞ்சம் மெதுவாக உரத்தக் குரல் இல்லாமல் பேசுங்கள்

25. பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்

26. விட்டுக்கொடுங்கள்.

No comments:

Post a Comment