About Me

My photo
Tirunelveli/Chennai, TamilNadu, India
நான் நானாக இருகிறேன்.....!

Thursday, November 10, 2011

ஏழ்மையை அழிக்கும் ஏழுமலை..

தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருகை தரும் அளவுக்கு பெருமை வாய்ந்த ஸ்தலம் திருப்பதி. தொல்காப்பியம் முதலான தமிழ்நூல்களில் வணங்கப்படும் திருமலை கோயில், தமிழக வைணவ பக்தி வரலாற்றில் திருவரங்கத்துக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுகிறது.இதன் வருட வருமானம் மூச்சை பிடித்து கொள்ளுங்கள்...சுமார் 800 கோடி.தினசரி உண்டியல் வசூல் மட்டும் 1 கோடி.ஒரே கட்டில் ஐம்பது லட்சம்,1 கோடி என காணிக்கை செலுத்தும் பக்தர்களும் உண்டு.

திருப்பதியில் வரும் இத்தகைய அளப்பரிய வருமானம் அரசுக்கு சென்று சேர்கிறது.மீதமுள்ள வருமானத்தில் மக்களுக்கு பல நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது திருப்பதி தேவ்ஸ்தானம்.

திருமலை தேவ்ஸ்தானத்தில் சுமார் 14,000 பேர் நேரடி வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.அதுபோக திருப்பதி நகரின் பொருளாதாரமே திருமலை கோயிலை நம்பித்தான் இருக்கிறது என்றால் மிகையல்ல.திருமலை தேவ்ஸ்தானத்தின் தலைவர் கருனாகர ரெட்டி விளிம்பு நிலை மக்களுக்கு பயனுள்ள பல திட்டங்களை திருக்கோயில் மூலம் செயல்படுத்தி வருகிறார்."தலித கோவிந்தம்" என்ற திட்டத்தின் கீழ் உற்சவர் சிலையை தலித் மக்கள் பகுதிகளுக்கு கொண்டு சென்று பெருமாள் - தாயார் சிலைகளுக்கு திருக்கல்யாண வைபவம் நடத்தப்படுகிறது. ஜாதி கொடுமை தலைவிரித்தாடும் கிராமங்களில் அக்கொடுமை குறைய இது ஒரு வழிகாட்டியாக அமையும் என்கிறார் ரெட்டி.

பெருமாள் தாயாருக்கு மட்டும் திருமணம் நடந்தால் போதுமா?வருடா வருடம் ஏழைகளுக்கு 2 பவுன் செலவில் தங்கம் அணிவித்து, திருமண உடைகளையும் தந்து திருகோவில் சார்பில் திருமணம் நடைபெறுகிறது.இதுவரை சுமார் 15,000 ஏழை தம்பதியினர் இதனால் பயனடைந்துள்ளனர்


ஆந்திராவின் அனைத்து மாவட்டங்களிலும், மமவட்டத்துக்கு 20 கோடி செலவில் திருமலை திருகோயில் சார்பில் பள்ளிகள் துவக்கப்பட்டு இலவச கல்வி அளிக்கப்படுகிறது.இந்திய கலாசாரம், பண்பாடு ஆகியவையும் இப்பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.

திருப்பதி தேவ்ஸ்தானம் சார்பில் தொழுநோயாளிகள் மருத்துவமனை நடத்தப்படுகிறது.நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை போக உணவு மற்றும் உறைவிடம் முற்றிலும் இலவசமாக சிகிச்சை காலம் முழுக்க வழங்கப்படுகிறது.(6 முதல் 18 மாதங்கள்).

பாலா மந்திர் என்ற பெயரில் அனாதை ஆசிரமம் நடந்து வருகிறது.சுமார் 500 குழந்தைகள் இதில் ஒரே சமயத்தில் சேர முடியும்.இவர்களுக்கு உணவு,உறைவிடம் மற்றும் கல்வி போக டெய்லரிங், போன்ற வேலைவாய்ப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.

வேங்கடேஸ்வரா மெடிகல் சயின்ஸ் ஆஸ்பத்திரி மூலம் ராயலசீமா மாவட்டத்தின் ஏழைகளுக்கு மிக குறைந்த செலவில் வைத்தியம் செய்யப்படுகிறது.

காது கேட்காத 350 குழந்தைகளுக்கு இலவச பள்ளியும் நடத்தப்படுகிறது.10 குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் சிறப்பான கவனிப்பு இந்த குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.இந்த பள்ளி மாணவ்ர்கள் நார்மலாக இருக்கும் பள்ளி மாணவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு விளையாட்டு போட்டிகளில் பரிசுகளை வெல்லும் அளவுக்கு தயார் படுத்தப்படுகிறார்கள்.படிப்பு முடிந்தபின் மாணவர்கள் பலர் திருப்பதி கோயிலிலேயே வேலை வாய்ப்பும் பெறுகிறார்கள்.விரைவில் இந்த பள்ளியை கல்லூரியாக மாற்றும் திட்டமும் உள்ளதாம்.

அதுபோக இயற்கை வளங்களை காப்பதில் திருப்பதி பெருமாள் ஒரு நல்ல முன் உதாரணமாக திகழ்கிறார்.ஆம்..80 கி.மிக்கு குழி வெட்டி சுமார் 3884 சிறு.குறு அணைகட்டுகளை கட்டி சேஷாதிரி மலையில் மழைநீர் சேகரிக்கப்படுகிறது.இதன்மூலம் வருடத்துக்கு 1 டி.எம்.சி மழை நீர் மக்களுக்கு சேமிக்கப்படுகிறது.இதுபோக சுமார் 65 லட்சம் மரங்கள் தேவஸ்தானத்தால் நடப்பட்டு அதுபோக சுமார் 40 டன் அளவுக்கு விதைகளும் நடப்பட்டுள்ளன.

திருப்பதி நகருக்கும் கோயிலுக்கும் ஏராளமான மின்சாரம் தேவைப்படுமே?அதை காற்று மூலம் உற்பத்தி செய்தால் தேசத்துக்கு எத்தனை நல்லது?45 கோடி செலவில் நிறுவப்பட்ட காற்ராலைகள் மூலம் சுமார் 45 மெகாவாட் மின்சாரத்தை வருடத்துக்கு உற்பத்தி செய்கிரது திருமலை.இதன்மூலம் வருடம் சுமார் 5.73 கோடி ரூபாய் அளவுக்கு மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

தினமும் அதிக அளவில் அன்னதானம் நடைபெறும் திருப்பதியில்(25,000 பேர்), சுமார் 15,000 பேருக்கு சூரிய ஒளியை பயன்படுத்தி உணவு தயாரிக்கப்படுகிறது.மொட்டை அடித்த பிறகு பக்தர்கள் சுடுநீரில் குளிக்க வேண்டுமே?அதற்கும் சூரியனே கைகொடுக்கிறார்.ஆம்..தினமும் 1.63 லட்சம் லிட்டர் சுடுநீர் சூரிய வெப்பத்தில் காய்ச்சப்பட்டு சுமார் 22.5 லட்சம் யூனிடுகள் மின்சாரம் சேமிக்கப்படுகிறது

மக்களுக்கு ஒரு திருக்கோயில் எப்படி உதவ முடியும் என்பதில் வழிகாட்டியாக இருக்கும் திருமலையை மனதார வாழ்த்தி வணங்குவோம். திருமலை பாலாஜி போல் நாமும் தேசத்துக்கு சேவை செய்வோம்.

வினாயக புராணம்:

அரு.ராமநாதன் தொகுத்த வினாயக புராணம்.அதில் கலியுகத்தில் நடக்கும் என கூறப்பட்டுள்ள சம்பவங்களின் பட்டியல் வியப்பை ஏற்படுத்தியது

அவை யாதெனில்

சுத்தமாக குளிக்காமல், அல்லது கலவி நடந்தபின்னர் ஆலயங்களில் பிரவேசித்தல்

தாய்,தந்தை,முத்தோர் ஆகியோரை போற்றாமல் உணவு உண்ணுதல்

பெரியவர்களிடம் பொருளை ஒரே கையால் வாங்குதல், அளித்தல்

இரண்டு பெரியவர்கள் நடுவே புகுந்து செல்லுதல்

புல்வெளியில் எச்சில் துப்புதல் அல்லது சிறுநீர்,மலம் கழித்தல்

நெருப்பை தாண்டுதல்

தன் தொடையில் வைத்து அன்னம் சாப்பிடுதல்

தன் மனைவியை பற்றி பிறரிடம் புகழ்ந்து கூறுதல்

ஆடை இல்லாமல் புண்ணிய குளத்தில் இறங்குதல்

பெரிஒய்ய்ர் அமருமாசனங்களை உதைத்து அவமதித்தல்

காரணமின்றி சிரித்தல்

விரல் நகங்களையும், ரோமத்தையும் பல்லினால் கடித்தல்

காலோடு கால் தேய்த்து கழுவுதல்

சாப்பிடும் பாத்திரத்தில் எச்சில் துப்புதல்

நெருப்பில் எச்சில் உமிழ்தல்

நேரை ஊற்றி நெருப்பை அணைத்தல்

படுத்தபடியும், சிரித்தபடியும் சாப்பிடுதல்

கரி,சாம்பல்,செங்கல் போன்றவற்றால் பல் துலக்குதல்

முதல்நாள் சமைத்த சாதம்,பழங்கறி,முட்டை,சுரைக்காய் ஆகியவற்றை உண்ணுதல்

பொழுதுவிடிந்தும் கண்விழிக்காது உறங்கல்

மாதவிலக்கு நாட்களில் மனைவியோடு சேரல்

எரியும் தீபத்தை வாயால் ஊதி அணைத்தல்...

பிற உயிர்களுக்கு தீங்கிழைத்தல்

தானம்,தருமம்,தியானம் ஆகியவற்றை கைவிடல்

அந்திபொழுதில் ஒளிதரும் விளக்கை கும்பிடாதிருத்தல்

பொய்சாட்சி கூறல்

பிறர்பொருளை கவர நினைத்தல்

பொய்,களவு,சூது,கொலை செய்தல்

தன் தலையில் தேய்த்து வழிந்த எண்னையை பிடித்து உடம்பில் தேய்த்து கொள்ளுதல்

துன்புறுத்தி இன்புறுத்தல்

விரல் நகத்தால் மலத்தை கீறுதல்

உயிர் கொல்லும் கொடியவர்களுடன் கூடி உறவாடுதல்

நல்லவர்களை கெட்டவர்கள் என கூறி இகழ்தல்

பாழடைந்த வீட்டில் படுத்துறங்கல்

மதுபானம் விற்றல், மதுபானம் அருந்த இணங்குதல்,மதுபானம் அருந்துபவருடன் பழகுதல்
சிவனையும், சிவனடியாரையும்,வேதம்,சிவாகமம்,ஸ்மிருதி,புராணம் முதலிய மேன்மை மிகுந்த வித்தைகளையும்,விபூதி,ருத்திராக்ஷங்களையும் இகழ்ந்துரைத்தல்

பூஜை,சிரார்த்தம்,போன்ற புண்ணீயநாட்களைல் நிகழ வேண்டிய சடங்குகளை நிகழ்த்தாதிருத்தல்

அத்தகைய நாட்களில் விருந்தாளிகளுக்கு சாப்பாடு போடாதிருத்தல்

பலர் நடுவே பிறரை பழித்துரைத்தல்

நையாண்டி செய்தல்

தாய்,மகள்,உடன்பிறந்தாள்,பிறர் மனைவி ஆகியோருடன் ஆண்மகன் தனியாக வசித்தல்

பெண்கள் தம் கணவனின் உருவத்தை தவிர பிற ஆடவனின் உருவத்தையும் நாடிபார்த்தல்,கை நொடித்தல்,கண்ஜாடை முதலான சாகசங்கள் செய்தல்

பிறர் வீட்டுக்குள் புழக்கடை வழியாக நுழைதல்

கீழோருக்கு எச்சிலை கொடுத்தல்

பிறர் நிழலை மிதித்தல்

இப்படி போகுது பட்டியல்.அப்பல்லாம் ரொம்ப நல்லவங்களா இருந்திருப்பாங்க போல..