About Me

My photo
Tirunelveli/Chennai, TamilNadu, India
நான் நானாக இருகிறேன்.....!

Wednesday, April 27, 2011

கட்டுப்பாடுகளும்,விடுதலைகளும்...!

இப்பொழுது நாம் அறிவுக் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வோம். மானசீகக் கட்டுப்பாடு என்று சொல்லும்பொழுது நீண்ட நேரம் தியானம் செய்து அதன் விளைவாக எண்ணங்களைக் கட்டுப்படுத்தி மௌனத்தை அடைகின்றதுதான் நமக்கு நினைவிற்கு வருகிறது. ஆனால் இது நமக்குத் தெரிந்த விஷயம். அதே சமயத்தில் அறிவு கட்டுப்பாட்டிற்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. தியானத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் இந்த இன்னொரு பக்கத்திற்குக் கொடுப்பதில்லை. இந்த இன்னொரு பக்கம் என்பது பேச்சுக் கட்டுப்பாடு. பொதுவாகப் பேச்சைக் குறைப்பது என்றால் பூரண மௌனத்திற்குப் போய்விடுவார்கள். ஆனால் உண்மையில் பூரண மௌனத்தைவிட அளவான பேச்சு என்ற கட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பதுதான் உண்மையில் சிரமமான காரியம். சிரமமாக இருந்தாலும் அதற்கேற்ற பலனையும் நாம் பார்க்கலாம்.

படைப்பில் முதன்முதலாகப் பேச்சைக் கையாள்கின்ற ஜீவராசி மனிதன்தான். தன்னுடைய இந்த விசேஷத் திறமை பற்றி மனிதனுக்குத் தற்பெருமையும் உண்டு. இந்தப் பெருமையின் காரணமாகவே மனிதனும் இந்த விசேஷத் திறமையை விவேகம் இல்லாமலும், ஒரு வரையறை இல்லாமலும் பயன்படுத்துகிறான். தேவையில்லாத பேச்சு இப்படி அதிகரிக்கும்போது இதற்கு எதிர்மாறாக இருக்கின்ற இந்தத் தாவர இனங்களின் அமைதியை நாம் இழந்துவிட்டோமே என்று ஒரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது.

அறிவிற்கும், பேச்சிற்கும் உள்ள தொடர்பை நாம் கூர்ந்து கவனித்தால் எந்த அளவிற்கு அறிவு வளர்ச்சி குறைந்து இருக்கிறதோ அந்த அளவிற்குப் பேச்சு அதிகரிக்கிறது என்பதைப் பார்க்கலாம். படிப்பறிவு இல்லாத மக்களைக் கவனித்தால் அன்னை சொல்வதினுடைய உண்மை தெரியவரும். அதாவது எழுத்தறிவு இல்லாதவர்களுக்குக் காதால் கேட்டுக் கொள்கின்ற விஷயங்களைத் திரும்பி வாயால் சொல்லிக் கொண்டால்தான் அவர்களுக்கு மனதில் படும். படிக்காத வேலைக்காரியிடம் எஜமானி அம்மா, கடைக்குப் போய் ஒரு கிலோ சர்க்கரை, ஒரு டஜன் முட்டை, அரை டஜன் வாழைப்பழம் வாங்கிக் கொண்டு வா, அப்படியே திரும்பி வருகிற வழியில் பேப்பர் கடைக்குச் சென்று குமுதம் வாங்கி வா, குமுதம் இல்லை என்றால் தேவி வாங்கி வா என்று சொன்னால் இதை அப்படியே மனதில் வாங்கிக் கொண்டு கடைக்குப் போக மாட்டார்கள். படித்த பெண்ணாக இருந்தால் சீட்டில் எழுதி வைத்துக் கொண்டு உடனே கிளம்பிவிடுவாள். படிக்காத பெண்ணாக இருந்தால் எஜமானி அம்மா சொன்னதை தானே வாய்விட்டு தனக்குச் சொல்க் கொள்வாள். அதாவது வாய்விட்டு பேசும்போதுதான் அவர்களுக்குச் சிந்திக்கவே முடிகிறது. எண்ணமே உருவாகிறது. இல்லாவிட்டால் அவர்களுக்கு எண்ணமோ, சிந்தனையோ உருவாவதில்லை.

படித்தவர்களை எடுத்துக் கொண்டால்கூட ஒரு கருத்தை அவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளும்போது அப்படியே அவர்களுக்குப் புரிந்துவிடும் என்று சொல்ல முடியாது. தான் படித்த விஷயத்தை மற்றவர்களிடம் விளக்கிப் பேசினால்தான் அவர்கள் படித்தது அவர்களுக்கே தெளிவாகப் புரியும். நாலாவது தடவைதான் அவர்களுக்கே புரிகிறது என்னும்போது முதல், இரண்டு, மூன்று தடவைகள் அவர்கள் பேச்சே ஒரு வரையறை இல்லாமல் தெளிவில்லாமல் இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு அறிவில் தெளிவு பிறக்க வேண்டும் என்றால் கேள்விப்பட்டதைப் பல தடவைகள் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது என்றாகிறது. இந்நிலை அறிவு வளர்ச்சி சராசரி நிலையில் இருக்கிறதைக் காட்டுகிறது.

இப்படிப்பட்டவர்களைத் திடீரென்று மேடைக்கு அழைத்து, பேசும்படிச் சொன்னால் சரளமாகப் பேசமுடியாது. முன்னேற்பாடுகள் செய்து கொள்ள இவர்களுக்குக் கால அவகாசம் வேண்டும். அப்பொழுதுதான் எதைப் பேசுவது, எப்படிப் பேசுவது, எந்த அளவிற்குப் பேசுவது என்றெல்லாம் அவர்களால் நினைத்துப் பார்த்துத் தயார் செய்து கொள்ள முடியும். இவர்களுக்கு அடுத்த உயர்ந்த நிலையில் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். அதாவது பேச்சு வன்மை உச்சகட்டத்தில் இருப்பதால் திடீரென்று அழைத்துப் பேசச் சொன்னாலும் சரளமாகப் பேசுவார்கள்.

ஆனால் பேச்சுக் கட்டுப்பாடு என்று எடுத்துக் கொண்டால் சிறந்த பேச்சாளருடைய பேச்சுகூட அனாவசியப் பேச்சு என்றாகிவிடலாம். அன்னையின் கண்ணோட்டாத்தில் தேவையில்லாத பேச்சு எதுவாக இருந்தாலும் அது அனாவசியப் பேச்சுதான். எது அவசியப் பேச்சு, எது அனாவசியப் பேச்சு என்று நிர்ணயிக்க வேண்டும் என்றால் முதலில் எத்தனை வகையான பேச்சு இருக்கிறது என்று பார்க்கவேண்டும்.

முதல் வகைப் பேச்சு நம்முடைய அன்றாடக் குடும்ப வாழ்க்கை மற்றும் வேலை விஷயமாக மற்றவர்களுடன் நாம் பேசும் பேச்சு. இவ்வகைப் பேச்சுதான் நமக்கு அதிகபட்சமாக இருக்கிறது. அதே சமயத்தில் உபயோககரமாகவும் இருக்கிறது. இந்தப் பேச்சையே எடுத்துக் கொண்டால்கூட நிறைய பேசித்தான் வேலை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை நாம் கவனித்தால் புரிந்து கொள்ளலாம். அதாவது பேச்சைக் குறைந்தபட்சத்திற்குக் கொண்டு வந்தால் இதே அளவு வேலை இன்னும் விரைவாக நடந்து முடிகிறது என்பதைப் பார்க்கலாம். அதாவது பேச்சு குறைந்து அமைதியும் concentration-உம் அதிகரிக்கும்பொழுது வேலை விரைவு பெறுகிறது என்பதைப் பார்க்கலாம்.

ஒரு குடும்பத்தில் ஒருவராக நாம் வாழ்கிறோம் என்றால், அவரவர்களுடைய அன்றாடச் செயல்களில் ஒரு ரெகுலாரிட்டி இருக்கும். அப்பட்சத்தில் ஆட்டமேட்டிக்காக நடக்கின்ற விஷயங்களை நாம் தினமும் பேச வேண்டிய அவசியம் இல்லை. காலையில் எழுந்தவுடன் குடும்பத் தலைவருக்கு டீ, காப்பி சர்வ் பண்ணுவது, பின்னர் காலை டிபன் கொடுப்பது என்பது அந்த வீட்டுத் தலைவி தானாகவே செய்வது. ஆகவே காபி வேண்டும், டிபன் வேண்டும் என்று இவர் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. மாலையில் அவரவர் வீடு திரும்பும்பொழுது இன்று அலுவலகத்தில் என்ன நடந்தது, பள்ளியில் என்ன நடந்தது என்றும், வீட்டில் என்ன நடந்தது என்றும் பரிமாறிக் கொள்ளும் பழக்கம் ரெகுலராக இருக்கிறது என்றால் அதைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. அவரவர்களே தாமாகச் சொல்வார்கள். சொல்லாமல் மௌனமாக இருக்கிறார்கள் என்றால் அதை நாம் கவனித்து, ஏனின்று மௌனமாக இருக்கிறீர்கள்? office-இல் என்ன நடந்தது என்று சொல்லக் கூடாதா? என்று கேட்கலாம். மற்றபடி எல்லாம் ரெகுலராக போய்க் கொண்டு இருந்தால் வழக்கமான கேள்விகள் தேவையே இல்லை.

அடுத்ததாக நமக்குத் தெரிந்தவர்களுடன் நாம் சோஷியலாக உறவாடுகிறோம். நண்பர்களைச் சந்தித்துப் பேசுவது, உறவினர்களைப் பார்க்கப் போவது, மற்றும் சோஷியல் function-க்குப் போவது என்பது எல்லாம் இதில் அடங்கும். இத்தகைய சந்தர்ப்பங்களில் நம்முடைய பேச்சு என்பது நம்முடைய feelings-ஐ வெளிப்படுத்துவதாக அமைகிறது. இங்கேயும் பேச்சுக் கட்டுப்பாடு என்பது மிகவும் உதவியாக இருக்கும் என்று அன்னை சொல்கிறார். நம் பேச்சுக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பொழுது நமக்குள் ஓர் உணர்ச்சி பொங்கி எழுந்தால், இந்த உணர்ச்சியை வெளிப்படுத்தலாமா? வேண்டாமா? என்று சிந்திக்க நமக்கு அவகாசம் கிடைக்கும். இந்த அவகாசத்தை நல்லபடியாகப் பயன்படுத்திக் கொண்டால் எத்தனையோ தேவையில்லாத தகராறுகளையும், சண்டைகளையும் நாம் தவிர்க்கலாம். நம்மைப் பற்றி உதாரணமாக நமக்கு நெருங்கிய நண்பரே தவறாகப் பேசுகிறார் என்ற தகவல் நமக்குக் கிடைக்கிறது. உடனே நமக்குக் கோபம் பொங்கி எழுகிறது. அவரைப் பார்த்தவுடன் எப்படி இப்படி நீங்கள் பேசலாம் என்று கேட்டுவிட மனம் துடிக்கிறது. உடனே போனை எடுத்து நம்பரை டயல் செய்து நண்பரை வசை பாடுவது என்பது ஒரு சாதாரணச் செயல். ஆனால் பேச்சுக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு இருப்பவர் இதைச் செய்வது சரியாகாது, மாறாகக் கோபம் பொங்கி எழுந்தாலும் பரவாயில்லை, இந்தக் கோபத்திலிருந்து முதலில் விடுபட்டு அன்பர் மன அமைதிக்கு வரவேண்டும். பின்னர் நிதானமாக மூன்றாவது நபர் கொடுத்த தகவல் உண்மையாக இருக்குமா? நண்பர் அப்படிப்பட்டவர்தானா? அல்லது மூன்றாவது மனிதர் விஷமியா? இருவரையும் பிரிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில் சொல்லி இருக்கிறாரா என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். சொன்னவர் விஷமி என்றால் நண்பர்மேல் உள்ள நம்பிக்கையை மதித்து அவரிடம் நம் கோபத்தை காட்டாமல் விஷமியிடம் இருந்து நாம் விலக வேண்டும். சொன்னவர் நம்மிடம் நல்லெண்ணம் கொண்டவர்தான், நாம்தான் நண்பரைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று தெரிந்தால் நண்பரிடம் இருந்து விலகுவது என்று முடிவு செய்துவிட்டு அமைதியாக இருக்கவேண்டும். ஆக எப்படிப் போனாலும் அன்னை நம்மிடம் எதிர்பார்ப்பது அமைதியான செயல்பாடே தவிர உணர்ச்சிகளை வார்த்தைகளால் கொட்டி ஆவேசப்படுவது இல்லை. ஆக அன்னை என்ன சொல்ல வருகிறார் என்றால் கோபம், எரிச்சல், பொறாமை, வன்முறை, கிண்டல், கேலி, ஆபாசம் போன்ற நெகடிவ்வான உணர்வுகள் எவையுமே நம்முடைய பேச்சில் வெளிப்படக் கூடாது என்கிறார். இதனால் வருகின்ற தகராறு மட்டும் தவறு என்றில்லை, நம்முடைய பேச்சால் இந்த உணர்வுகளுக்கு ஒரு வெளிப்பாடு கிடைக்கும்பொழுது அடுத்தவர்கள் மனநிலையும் தெரிகிறது. அதன் விளைவாகச் சூழலும் கெடுகிறது. சூழல் கெடுவதற்கு நாம் காரணமாக ஒரு பொழுதும் இருக்கக்கூடாது.

அனாவசியப் பேச்சு என்று எடுத்துக் கொள்ளும்பொழுது அடுத்தவர்களை நாம் விமர்சனம் செய்யும் எந்த பேச்சையும் நாம் இங்குக் கருத வேண்டும். நம்முடைய பொறுப்பில் இருக்கின்றவர்களைப் பற்றித்தான் பேச நமக்கு உரிமை இருக்கிறதே தவிர நம்முடைய பொறுப்பில் இல்லாதவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி விமர்சனம் செய்ய நமக்கு உரிமையில்லை. நம் வீட்டுப் பையன் சரியாகப் படிக்காமல் வீணாகப் பொழுதைக் கழிக்கிறான் என்றால் அவனைக் கண்டித்துப் பேச நமக்கு உரிமை இருக்கிறது. அதே சமயத்தில் பக்கத்து வீட்டுப் பையன் படிக்காமல் ஊர் சுற்றுகிறான் என்றால் நம் வீட்டில் அமர்ந்துகொண்டு அவனைக் கிண்டல் செய்து பேசுவது நமக்கு சரியில்லை. அவனைக் கண்டிப்பது அவன் தகப்பனாரின் பொறுப்பு. நம்முடைய கிண்டல் அவனுக்கும் உதவாது, அதே சமயத்தில் நம்முடைய பேச்சு கட்டுப்பாட்டை இழக்கிறது என்பதால் இந்தக் கிண்டல் நம் consciousness லெவலையும் இறக்குகிறது.

நாம் ஓர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டு இருக்கிறோம் என்றால் நம்முடைய வேலையே எங்கே என்ன வேலை நடக்கிறது என்று ரிப்போர்ட் செய்யக்கூடிய வேலையாக இருக்கலாம். இப்படிப்பட்ட பொறுப்பு நமக்குக் கொடுக்கப்பட்டால் அதை நாம் மிக ஜாக்கிரதையாக நிறைவேற்ற வேண்டும். அதாவது நம்முடைய ரிப்போர்ட் வேலையை ஒட்டித்தான் இருக்கவேண்டுமே தவிர பர்சனல் விஷயங்கள் எல்லாம் அதில் வரக்கூடாது. இரண்டாவதாக ரிப்போர்ட் என்பது பாரபட்சமின்றி ஒரு நடுநிலைமையை வெளிப்படுத்தும் ஒன்றாக அமைய வேண்டும். அதாவது நம்முடைய விருப்பு வெறுப்புகள், தனிப்பட்ட அபிப்பிராயங்கள் அதில் தலையிடக்கூடாது. நம்முடைய இன்ஸ்பெக்ஷனுக்கு ஆளாகி இருக்கின்ற ஒருவர் வேலையைப் பொறுத்தவரை சிறப்பாகச் செய்பவராக இருக்கலாம். ஆனால் அவரிடம் நமக்கு வேண்டியவருக்கு வேலை போட்டுத் தரும்படிச் சொல்ல அவரை அணுகியபோது அவர் அதை மறுத்திருக்கலாம். இதன் காரணமாக நமக்கு வந்த பொறுப்பை வைத்து அவர் டிபார்ட்மெண்டில் வேலை சரியாக நடக்கவில்லை என்று நாம் எழுதுவது சரியில்லை. இறுதியில் பொதுவாக என்ன சொல்லலாம் என்றால் அடுத்தவரைப் பற்றி நாம் பேசுவதை எந்த அளவிற்குக் குறைத்துக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு அது நல்லது என்றாகிறது. அதாவது எவரைப் பற்றியும் முடிவான அபிப்பிராயத்தை அடித்துச் சொல்வது சரியில்லை என்று அன்னை கூறுகிறார்.

நாம் பேசுகின்ற வார்த்தைகளுக்கு ஒரு சூட்சும சக்தி இருக்கிறது என்று அன்னை சொல்கிறார். இதன் காரணமாக நாம் என்ன பேசுகின்றோமோ அது நிஜமாகக்கூடிய வாய்ப்புகள் உருவாகின்றன என்று கூறுகிறார். இதனால் அடுத்தவரைப் பற்றி நாம் தவறாகப் பேசினால் அது பலிக்கக்கூடிய அபாயம் இருக்கிறது. இத்தகைய அபாயங்களுக்கு நாம் இடம் கொடுக்கவே கூடாது என்கிறார். அடுத்தவர்களிடம் நாம் காண்கின்ற குறைகளைத் திருத்தக் கூடிய சக்தி நமக்கு இருந்தது என்றால் அப்பொழுது மட்டும் நாம் அவர்களைப் பகிங்கரமாகக் கண்டிக்கலாம் என்கிறார். நம்முடன் வேலை செய்பவருக்கு பங்சுவாலிட்டி இல்லை என்று வைத்துக் கொள்வோம். அவரை நம்மால் திருத்த முடியும் என்றால் அவரை நாம் கண்டிக்கலாம். அடுத்தவரைத் திருத்துகின்ற சக்தி எப்பொழுது நமக்குப் பிறக்கிறது என்று கேட்டால் நம்முடைய பர்சனாலிட்டி உண்மை நிரம்பியதாகவும், நம்முடைய ஜீவிய நிலை சத்திய ஜீவிய நிலைக்கு உயர்ந்து இருக்கும்பொழுதும்தான் என்கிறார். இப்படிப்பட்டவர்களுக்கு தான் என்ற அகந்தை கரைந்து போய்விடுவதால் இறைவனின் பரிசுத்த கருவியாக இவர்களால் செயல்பட முடிகிறது.

இப்பொழுது சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மற்றும் இலட்சியவாதிகள் ஆகியவர்கள் பேசுகின்ற பேச்சை எடுத்துக் கொள்வோம். இவர்கள் எல்லாம் உயர்ந்த நிலையில் இருப்பதால் இவர்களுடைய பேச்சில் இயற்கையிலேயே ஒரு கட்டுப்பாடு இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் அப்படியில்லை. இங்கேயும் பிடிவாதம், குறுகிய மனப்பான்மை என்பவை எல்லாம் நிறைந்து இருக்கத்தான் செய்கின்றன. ஆகவே வாதம் என்று ஆரம்பித்து முரண்பாடுகள் அதிகமாகி டிஸ்கஷன் என்பது தகராற்றில் போய் முடியக் கூடிய சந்தர்ப்பங்களுக்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. தகராறு கூடாது என்றால் உண்மை முழுமையில் ஒரு பக்கம் தானே தவிர இதுவே முழுமையில்லை. அடுத்தவர்களுடைய கொள்கையில் உள்ள உண்மையை நாம் ஏற்றுக் கொண்டு நம்முடையதையும், மற்றவர்களுடையதையும், எல்லாவற்றையும் ஒன்று சேர்க்கும்பொழுதுதான் முழு உண்மை வெளிவருகிறது. அக்கட்டத்தில் நாம் சுமுகத்தைக் கொண்டு வரலாம். ஆக இந்தப் பரந்த கண்ணோட்டம் வரும் வரையிலும் நம்முடைய பேச்சில் கட்டுப்பாடு இருந்தாலொழிய நாம் தகராறுகளைத் தவிர்க்க முடியாது. காஷ்மீர் விஷயமாக எப்பொழுது meeting போட்டாலும் அது இந்தியா பாகிஸ்தான் தகராற்றில் முடியும். காரணம் சம்பந்தப்பட்டவர்களின் குறுகிய கண்ணோட்டம். இந்தியா, பாகிஸ்தான், காஷ்மீர் மூன்றும் ஒன்றாக இணையும்பொழுதுதான் இந்தியா முழுமை பெறுகிறது என்ற கருத்தை மூன்று தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும்பொழுது அங்கே வாதத்திற்கோ, தகராற்றுக்கோ இடமில்லை. உண்மை, முழுமை அடையும்பொழுது தானாகவே அங்கு சுமுகம் வந்துவிடுகிறது.

அடுத்தபடியாக அன்னை என்ன சொல்கிறார் என்றால் ஐடியாக்களுக்கு பிராக்டிக்கல் பவர் இருக்க வேண்டும் என்கிறார். அதாவது அவைகளுக்குச் செயல்படும் சக்தி வேண்டும். ஆகவே எந்தெந்த ஐடியாவிற்கு இந்த சக்தி இருக்கிறதோ, அவைகளை நாம் தாராளமாகப் பேச்சில் வெளிப்படுத்தலாம் என்கிறார். ஸ்ரீ அரவிந்தம் இப்படிப்பட்ட ஒரு ஐடியா, இதற்கு உலகைத் திருவுருமாற்றக் கூடிய சக்தி இருக்கிறது. ஆகவே இதைப் பற்றி நாம் நிறையவே பேசலாம்.

இப்பொழுது கல்வி என்ற சப்ஜெக்ட்டிற்கு வருவோம். படிப்பின் பாரத்தைக் குறைத்து மாணவ மாணவியருக்கு மேலும் நிறைய relaxation கொடுக்க வேண்டும் என்று ஒரு புதிய பாணி இப்பொழுது துவங்கியிருக்கிறது. இக்கண்ணோட்டத்தில் ஓர் உண்மை இருந்தாலும் relaxation என்ற பெயரில் மட்டமான விஷயங்களை அனுமதிக்கக் கூடாது. Story discussion என்பது ஒரு லைட்டான subject தான், இருந்தாலும் எடுத்துக் கொள்கின்றstory தரமானstory ஆக இருக்க வேண்டும்.

அப்படி இல்லாமல் காமரசம் நிரம்பிய நாவலை discussion க்கு எடுத்துக் கொள்ளும்பொழுது சூழலே தாழ்ந்து போகிறது. ஆகவே தரமான விஷயங்களை discuss செய்வது என்று முடிவு செய்தால்தான் பேச்சுக் கட்டுப்பாட்டில் நாம் வெற்றியைக் காண முடியும்.

Relaxation மற்றும் entertainment வேண்டும் என்ற எண்ணமோ மற்றும் இவை தவிர்க்க முடியாதவை என்ற நினைப்போ ஆன்மீகரீதியாக பார்க்கும்பொழுது சரியில்லை. நம்முடைய இறை ஆர்வம் (aspiration) குறையும்பொழுதும், மனவுறுதி தளரும் பொழுதும், தாமசம் தலை எடுக்கும்பொழுதும்தான் நமக்கு entertainmentவேண்டும் என்று தோன்றுகிறது. ஆகவே இறை ஆர்வத்தில் நாம் ஸ்டெடியாக இருந்தோம் என்றால் தாமசமே தலை எடுக்காமல் நம்மை விட்டு விலகுவதைப் பார்க்கலாம்.

அடுத்தபடியாக வீண்பேச்சு என்று எடுத்துக் கொண்டால் ஆன்மீகத்தில் வீண்பேச்சு கிடையாது என்ற கட்டாயம் இல்லை. மற்ற subjectக்களை போலவே ஆன்மீகத் துறையிலும் வீண் பேச்சு பேசலாம். புதிதாக ஆன்மீகத் துறைக்கு வருபவர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாகத் தாம் கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி நிறைய பேசுவார்கள். ஐந்து நிமிடம் அர்த்தமுள்ளதாகப் பேசவேண்டும் என்றாலும் கூட பல மணி நேரம் concentrationதேவைப்படுகிறது என்பதை இப்படிப்பட்டவர்கள் நாளடைவில்தான் தெரிந்து கொள்கிறார்கள்.

குருவாக ஏற்றுக் கொண்டவர்களைத் தவிர மற்றவர்களிடம் நமக்குக் கிடைக்கின்ற ஆன்மீக அனுபவங்களைப் பற்றிப் பேசவே கூடாது என்பது ஆன்மீகத் துறையில் ஓர் அடிப்படையான கட்டுப்பாடு ஆகும். நமக்குக் கிடைக்கின்ற அனுபவம் நம் பர்சனாலிட்டியில் நிலை பெறும்வரை அதைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். அப்படிப் பாதுகாக்காமல் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு இருந்தால் அனுபவம் நிலைபெறாமல் மறைந்துவிடும். ஒரு தீக்குச்சியைக் கொளுத்தும்பொழுது அது அணையாமல் இருப்பதற்குக் கையால் அதை மூடிக் கொள்கிறோம். கொளுத்திய தீக்குச்சி மேல் காற்றுப்பட அனுமதித்தால் உடனே அது அணைந்துவிடுகிறது. இம்மாதிரி நம் அனுபவத்தை நான்கு பேருடன் பகிர்ந்து கொள்ளும்பொழுது இந்த அனுபவத்தில் இருக்கின்ற எனர்ஜி விரயமாகின்றது. குருநாதரிடம் மட்டும் சொல்லும்பொழுது நமக்கு வழிகாட்டல் கிடைக்கிறது என்பதால் அது நமக்கு உபயோகமாக இருக்கிறது.

இப்பொழுது நாம் குருவையே எடுத்துக் கொள்வோம். அவருடைய ஆன்மீக முன்னேற்றத்தில்கூட பேச்சுக் கட்டுப்பாட்டிற்கு ஓர் இடம் இருக்கிறது. சிஷ்யர்களுக்கு வழி காட்டுவதுதான் அவருடைய வேலை என்றில்லை. அவருடைய சொந்த யோக சாதனையில் அவர் முன்னேற்றம் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். முன்னேறுவதை அவர் நிறுத்தினார் என்றால் அவருடைய யோக சாதனையில் அவருக்கு ஓர் இறக்கம் வரத்தான் செய்யும். தமக்குக் கிடைக்கின்ற ஆன்மீக அனுபவத்தை உடனே சீடர்களிடம் பகிர்ந்து கொண்டார் என்றால் அந்த அனுபவம் கரைந்து போகக் கூடிய ஆபத்து அவருக்கும்தான் இருக்கிறது. அதே சமயத்தில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்பொழுது அவருடைய ஆன்மீக முன்னேற்றமும் அந்த அளவிற்கு விரைவு பெறுகிறது. ஆக எந்த நேரம் எதைச் சொல்வது, எதைச் சொல்லாமல் இருப்பது என்பதை அவர்தான் சூழ்நிலையைப் பார்த்து முடிவு செய்யவேண்டும். அனுபவங்களைப் பற்றிப் பேசும்போது தற்பெருமை அதில் கலந்தது என்றால் அவரிடம் உள்ள புனிதம் போய்விடும். இறைவனே அவதாரமாகப் பூவுலகிற்கு வரும்போது கூட அவரும் தொடர்ந்து ஆன்மீகத் துறையில் முன்னேறிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அவர் தம்முடைய இறைத்தன்மையைப் பூவுலகில் பரிபூரணமாக வெளிப்படுத்த வேண்டும் என்றால், மானிடர்கள் perfectionஐ விரும்பி ஏற்க வேண்டும். கடமை உணர்வோடு நாம் இப்பொழுது செய்கின்றது எல்லாம் அன்பின் வெளிப்பாடாகச் செய்தோம் என்றால் நாம் perfectionஐ விரும்பி ஏற்பதாக அர்த்தமாகிறது. அதாவது முன்னேறுவதை ஒரு சிரமமாக நினைக்காமல் அதை ஓர் இன்பகரமான அனுபவமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய முழு ஜீவனும் ஒத்துழைத்து முயற்சி எடுக்கும்பொழுது முன்னேற்றம் என்பது இன்பகரமான அனுபவமாகிறது. இப்படி இல்லாமல் நம்முடைய பர்சனாலிடியை நாம் பலவந்தப்படுத்தும்பொழுது நமக்குச் சிரமம் அதிகரிக்கிறது. இறுதியாக இவ்விஷயத்தில் அன்னை என்ன சொல்ல விரும்புகிறார் என்றால்,

நம் பேச்சு உண்மை நிரம்பியதாக இருக்கவேண்டும். நம் மனதில் மௌனம் குடிகொண்டு இருக்கவேண்டும். நம்முடைய இறை ஆர்வம் இடையறாது இருக்க வேண்டும். மேலும் அந்த இறை ஆர்வத்தில் sincerity இருக்கவேண்டும். Sincerity என்றால் நம் இறை ஆர்வத்திற்குப் பின்னால் நமக்குப் பேரும் புகழும் கிடைக்கவேண்டும் என்ற ambitionஎல்லாம் இருக்கக்கூடாது. இப்படி எல்லாம் நம் மனம் இருந்தால் எந்தச் சூழ்நிலையில் என்ன பேச வேண்டுமோ அதை மட்டும் பேசுவதுபோல் அமையும். கூடவோ, குறையவோ பேசும்படி அமையாது. மேலும் நம் பேச்சில் ஒரு கிரியேட்டிவ் சக்தி வெளிப்படும். இந்நிலையை எட்டுவதற்குச் சில வழி முறைகள் இருக்கின்றன. அதாவது என்ன பேசப் போகிறோம் என்று முன்கூட்டியே சிந்திக்கக் கூடாது. நாம் பேசப்போவதின் விளைவுகளையும் ஆராயக்கூடாது. அதாவது நாம் சொல்வது பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளப்படுமா? நெகட்டிவ்வாக எடுத்துக் கொள்ளப்படுமா என்று யோசிக்கக் கூடாது. இவையே மனதில் மௌனம் குடிகொள்ளும் வழிகள்.

இருக்கின்ற கட்டுப்பாடுகளிலேயே மிகவும் கடினமானது உணர்வுக் கட்டுப்பாடுதான். இவ்விஷயத்தில் கட்டுப்பாட்டைக் கொண்டு வர முடியாது என்ற எண்ணம் மனிதனுக்கு இருக்கிறது. காம உணர்வை அன்பு என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காமத்தின் தாக்குதலிலிருந்து தப்ப முடியாது என்று பரவலாக ஓர்அபிப்பிராயம் இருக்கிறது. காமத்தின் காரணமாக பெரிய குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

காம உணர்வைக் கட்டுப்படுத்துவதற்காக சமூகம், பலவிதமான கட்டுப்பாடுகளை உருவாக்கி இருக்கிறது. பெரும்பாலும் இந்தக் கட்டுப்பாடுகள் உடைக்கத்தான் படுகின்றன. அப்படியே காமம் தடுக்கப்பட்டாலும் பின்னால் அது பெரிய வெடிபோல் வெடிக்கத்தான் செய்கிறது. இதிலிருந்து நாம் என்ன புரிந்து கொள்ள வேண்டும் என்றால் கட்டுப்பாட்டுகளால் காமத்தை அடக்க முடியாது. காமத்தை விட உயர்ந்த தெய்வீக அன்பு என்ற ஒரு பெரிய சக்தியைக் கொண்டு தான் இந்த உணர்வையே நம்மால் திருவுருமாற்றம் செய்ய முடியும். தெய்வீக அன்பு என்ற ஒரு சக்தி உலகில் செயல்படாவிட்டால் உலகம் inconscient நிலைக்குப் போய்விடும்.

உலகத்தை உண்டு பண்ணியது ஜீவியம் என்றாலும், அதைக் காப்பாற்றுவது அன்புதான். தெய்வீக அன்பை நாம் அனுபவித்துதான் உணர முடியும். தத்துவ ஞானிகளும்,ஆன்மீகவாதிகளும் தெய்வீக அன்பு என்ன என்று வார்த்தைகளால் வர்ணிக்க முயன்றுள்ளார்கள். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் பலன் அளிக்காமல் போய்விட்டன. நான் பெரியதாக வர்ணிக்க விரும்பவில்லை. சுருக்கமாகச் சொல்ல விரும்புகிறேன். அதாவது அன்பு என்பது ஐக்கியத்தில் உண்டாகின்ற சந்தோஷத்தின் வெளிப்பாடாகும். ஐக்கிய பேரின்பமே அன்பு என்று சொல்லலாம். அன்பின் ஆதியை நாம் ஆராய்ந்து பார்த்தால் ஐக்கியத்திற்கு உதவக் கூடிய இரண்டு இயக்கங்கள் (movement) அதில் இருப்பதைப் பார்க்கலாம். ஒரு movement , அடுத்தவரை நாடுகிற நாட்டமாக அமைகிறது. இன்னொரு movement தன்னைப் பிறருக்கு வழங்கும் self-giving movementஆக அமைகிறது. படைப்பில் ஜீவியம் அதன் ஆதியிலிருந்து பிரிந்து unconsciousஆக மாறியபோது ஏற்பட்ட இடைவெளியை நிரப்புவதற்கு அன்பைத் தவிர வேறு சிறந்த கருவியில்லை.

பிரபஞ்சத்தை அழிக்காமல் படைப்பை அதன் ஆதியோடு மீண்டும் இணைப்பதற்கு அவசியம் வந்தபொழுது ஐக்கியத்தின் கருவியாகிய அன்பு வெளிப்பட்டு அவ்வேலையைச் செய்ய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வெளிப்பட்ட அன்பு எல்லாம் இருந்த அடர்ந்த இருளில் இடம் தெரியாமல் சிதறிப்போனது. பின்னர் ஜடம் என்று உருவாகி பரிணாமம் என்று தொடங்கிய பிறகு அன்பின் வெளிப்பாடுகளும் ஆரம்பித்தன. இயற்கையின் எல்லா இயக்கங்களிலும் மற்றும் குழுமங்களிலும் நாம் அன்பின் வெளிப்பாட்டை உணரலாம். வெளிச்சம் வேண்டி செடிகளும் மரங்களும் மேல் நோக்கி வளர்வது அன்பின் வெளிப்பாடுதான். மலர்கள் தம்முடைய அழகு மற்றும் வாசனையின் மூலம் தம்மைப் பிறருக்கு வழங்குவதும் அன்பின் வெளிப்பாடுதான். பிராணிகளுடைய பசி, தாகம் மற்றும் இன அபிவிருத்தி என்று எல்லாவற்றிற்கும் பின்னால் தெரிந்தோ, தெரியாமலோ அன்பின் இயக்கம் இருக்கிறது. இதனுடைய உச்ச கட்ட வெளிப்பாட்டை, குட்டிகளைப் பேணிக் காக்கின்ற பெண் பாலூட்டும் பிராணிகளிடம் பார்க்கலாம். மனிதனை எடுத்துக் கொண்டால் அன்பின் செயல்பாடு conscious ஆகவே இருக்கிறது. மேலும் மனிதனைப் பொறுத்த அளவில் அன்பு மற்றும் இனப்பெருக்கத்திற்கு இடையே இருந்த தொடர்பை இயற்கை மேலும் பலப்படுத்திவிட்டது. அதாவது இரண்டையுமே பிரித்துப் பார்க்கக்கூடிய சக்தி படைத்தவர்களே மிகவும் குறைவு என்றாயிற்று. அப்படி இனப் பெருக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டபின் அன்பின் தரம் இறங்கிவிட்டது என்றுகூடச் சொல்லலாம். ஆணையும் பெண்ணையும் ஜோடி சேர்ப்பது என்பது இயற்கையின் முதற்கட்ட நடவடிக்கை. அடுத்த கட்டமாகக் குடும்பத்தை உருவாக்கியது, பின்னர் படிப்படியாக ஜாதி, சமூகம், தேசம், இனம் என்று பெரிய பெரிய குழுமங்களை உருவாக்கியது. இறுதியில் இன்றுள்ள பல்வேறு நாடுகளையும், இனங்களையும் ஒன்று சேர்த்து மானிடர்களிடையே ஓர் அடிப்படை ஒற்றுமையை இயற்கை உருவாக்கத்தான் போகிறது.

ஆனால் பெரும்பாலான மக்கள் இப்படி ஒரு திட்டத்தோடு இயற்கை செயல்படுவதாக அறிவதில்லை. அவர்களுக்கு அமைந்த வாழ்க்கைச் சந்தர்ப்பங்களை அப்படியே ஏற்றுக் கொள்கிறார்கள். சிலருக்கு அதுபற்றி சந்தோஷம், சிலருக்குத் தம்முடைய வாழ்க்கைச் சூழ்நிலை பற்றி அதிருப்தி. வாழ்க்கையில் இன்ப துன்பங்களைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு சிற்றின்ப ஈடுபாடுகளில் முழுவதுமாக மூழ்கி இருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வாழ்க்கைக்கு ஏதாவது உயர்ந்த நோக்கம் இருக்கிறதா என்ற கேள்வியே அவர்களுக்கு வருவதில்லை. முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் அவர்களுக்கு இருப்பது இல்லை. இப்படிப்பட்டவர்களை யோகப் பாதைக்கு அழைப்பதே தவறு. ஆன்மீகத்தைப் பற்றி இப்படிப்பட்டவர்களுடன் பேசினால் அவர்கள் நிலை குலைந்து போவார்கள். இயற்கையோடு அவர்களுக்கு இருக்கின்ற நெருக்கமான மற்றும், சுமுகமான உறவை நாம் அனாவசியமாகக் கெடுக்கக் கூடாது.

அன்பின் வெளிப்பாட்டையும், அதனால் கிடைக்கின்ற சந்தோஷத்தையும் ஏதோ ஒரு ரூபத்தில் உணர்ந்தவர்களும் இருக்கிறார்கள். தம்முடைய குடும்பத்திற்காகவும், தேசத்திற்காகவும், மதத்திற்காகவும் self-givingஇல் ஈடுபட்டு அதன்மூலம் பெருமகிழ்ச்சி அடைந்தவர்கள் இருக்கிறார்கள். இந்தப் பெருமகிழ்ச்சி அவர்களுக்கு இறைவனோடு ஒரு தொடர்பு கிடைத்ததுபோன்ற உணர்வைக் கொடுக்கிறது. ஆனால் இந்தத் தொடர்பு பெரும்பாலும் தற்காலிகமாகத்தான் இருக்கிறது. பரிசுத்தமான அன்பாக இருந்தால் கூட இறைவனோடு கிடைக்கின்ற தொடர்பு நீடிக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அன்பு என்பதே இறைவனுடைய பல அம்சங்களில் ஓர் அம்சம்தான். ஓர் அம்சத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாம் நிரந்தரத் தொடர்பை அனுபவிக்க முடியாது.

இயற்கையினுடைய வேகம் போதும் என்பவர்களுக்கு அன்பினுடைய மானிட வெளிப்பாடே போதும். ஆனால் மானிட நிலையையே தாண்டி சத்திய ஜீவிய நிலைக்கு உயர விரும்புவர்களுக்கு இந்த இயற்கையின் வேகமோ மற்றும் மானிட அன்பின் வெளிப்பாடோ போதாது. இவர்கள் மானிட அன்பின் எல்லா ரூபங்களையும் ஒதுக்கி வைக்க வேண்டும். மானிட அன்பு எவ்வளவு பரிசுத்தமாக இருந்தாலும், மானிட அன்பு என்பது இறைவனோடு உள்ள தொடர்பிற்கு ஒரு குறுக்கீடாகவே அமைகிறது. இறை அன்பை உணர்ந்தவர்களுக்கு, மற்ற எல்லாவித அன்பும் தரம் குறைந்ததாகவே தெரியும். மானிட அன்பின் உயர்ந்த வெளிப்பாட்டில் கூட, சுயநலம், முரண்பாடு, ஆதிக்கம், எரிச்சல் இவை எல்லாம் கலந்து இருக்கத்தான் செய்கின்றன.

நாம் எதை விரும்புகிறோமோ அதாக மாறுகிறோம் என்பது பரவலாகத் தெரிந்த உண்மை. ஆகவே தெய்வத்தோடு ஐக்கியமாக வேண்டும் என்பவர்கள் இறைவனை மட்டும் விரும்ப வேண்டும். இறைவனோடு அன்பு பரிமாற்றம் செய்து கொண்டவர்களுக்குத் தான் அதோடு ஒப்பிடும்பொழுது மற்ற அன்பு வெளிப்பாடு எல்லாம் எவ்வளவு ருசி இல்லாமல் இருக்கிறது என்பது தெரியும். இறை அன்பை உணர கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்றாலும் கிடைப்பது பேரின்பம் என்பதால் எந்தக் கட்டுப்பாட்டையும் நாம் ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்லலாம்.

தெய்வீக அன்பு பூரணமாக வெளிப்படக்கூடிய நேரம் உலகத்தில் ஓர் அற்புதமான நேரம் என்றாகிறது. அப்படி இறை அன்பு முழுவதும் வெளிப்படும்பொழுதுதான் இந்தப் பூவுலகமும் இறைவனுக்கு ஏற்ற இருப்பிடமாகிறது. மனிதனுக்கும், தனக்கும் உள்ள இடைவெளியை குறைப்பதற்காக இறைவன் மானிட வடிவம் எடுத்து, அவ்வடிவத்தின் மூலம் இறை அன்பை வெளிப்படுத்த முயன்றது உண்டு. ஆனால் பவித்திரமான அன்பிற்கு உலகம் பாத்திரமாக இல்லாதபோது மனித வடிவில் இறைவன் எடுத்த முயற்சிகள் வீணாகி உள்ளன. மேலும் இறைவனும் மனிதனை நாடிவரும்பொழுது இறைவன் பலஹீனமாகிவிட்டான் என்று மனிதன் தன் அகந்தையால் நினைக்கின்றான். ஆகவே, மனிதன் தன் தரத்தை உயர்த்திக் கொள்ளும்வரை இறைவன் காத்திருக்க வேண்டியுள்ளது. மனிதனின் குறைபாடுகளையும் மீறி, அவனுக்கே இப்பொழுது என்ன புரிகிறது என்றால், உலகத்தில் துன்பங்களைத் தீர்ப்பதற்கு இறை அன்பு ஒன்றால்தான் முடியும் என்று தெரிகிறது. இந்த அன்பு வெளிப்படும் பொழுதுதான் இறைவனிடமிருந்து பிரிந்து வந்ததால் விளைந்த வேதனையிலிருந்து படைப்பால் மீற முடியும். நாம் எடுக்கும் முயற்சிகள் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் அம்முயற்சியின் பலனாக மானிட உடம்பு இறைவனைப் பரிசுத்தமாக வெளிப்படுத்தக் கூடிய பக்குவத்தைப் பெறும் என்றால் அந்த முயற்சியை நாம் எடுக்கலாம். அப்படியானால் என்ன முயற்சியை எடுக்க வேண்டும், அதன் கட்டங்கள் என்ன என்று கேட்பீர்கள்.

நம்முடைய அன்பை எல்லாம் இறைவனுக்கே தருவது என்று முடிவு செய்து உள்ளோம். ஆகவே மற்றவர்களோடு நமக்கு இருக்கின்ற உறவில் எந்நேரமும் சுயநலமில்லாத ஒரு கருணையையும், நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தினாலே போதும். நம்முடைய நல்லெண்ணத்திற்குப் பிரதிபலனாக ஓர் அங்கீகாரத்தையோ அல்லது நன்றி அறிதலையோகூட நாடக் கூடாது. மற்றவர்கள் நம்மை எப்படி நடத்தினாலும் நாம் அவர்கள் மேல் எரிச்சலை வளர்த்துக் கொள்ளக் கூடாது. மற்றவருடைய கோபம், மற்றும் கெட்டெண்ணத்திலிருந்து இறைவன் நம்மைக் காப்பாற்றுவான் என்று நாம் செயல்பட்டுக் கொண்டு இருக்கவேண்டும். நமக்கு ஓர்ஆதரவு வேண்டும் என்றால் அதை இறைவனிடம் மட்டும் கேட்க வேண்டும். அவர் நமக்கு வழிகாட்டி. தடுமாறும்போது நமக்கு ஒரு தெளிவை வழங்கி, சிரமப்படும்பொழுது ஆறுதலைச் சொல்லி நமக்கு வேண்டியதை எல்லாம் செய்வார். ஆக இறுதியாகச் சொன்னால் உணர்வுக் கட்டுப்பாடு என்பது எல்லாவித பாசபந்தங்களையும் விட்டுவிட்டு இறைவனோடு மட்டும் ஒரு பாசப் பிணைப்பை வைத்துக் கொள்ள வேண்டும் என்றாகிறது. இறைவன் மேலேயே குறியாக இருக்கும்பொழுது இறைவனோடு நமக்கு ஓர் ஐக்கியம் கிட்டுகிறது. அது நம்முடைய சத்திய ஜீவிய திருவுருமாற்றத்திற்கு உதவுகிறது. பாசபந்தங்களிலிருந்து உணர்வுகள் விடுபடும்பொழுது பாசப் பிணைப்புகளால் வருகின்ற துன்பங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கிறது. அறிவு அறியாமையில் இருந்து விடுபடும்பொழுது நமக்கு சத்தியஜீவிய ஞானம் கிடைக்கிறது. சத்திய ஜீவன் நமக்குள் பிறக்கும்பொழுது அதன் படைப்புத் திறனும் நமக்கு வருகிறது. ஆசையிலிருந்து விடுபடும்பொழுது நம்முடைய மன உறுதியை இறைவனுடைய மன உறுதியுடன் இணைத்துக் கொள்ளக்கூடிய திறன் கிடைக்கிறது. இதன் விளைவாக நமக்கு எந்நேரமும் அமைதியும், தெளிவும் கிடைக்கின்றன. இறுதியாக உடம்பிற்கு கிடைக்கும் விடுதலையின் பலனாக இயற்கையின் பிடியிலிருந்து நாம் விடுபடுகிறோம். அதாவது இயற்கையின் விதிமுறைகள் மனிதர்களைச் சாதாரண வாழ்க்கை என்ற தெரிந்த பாதையிலேயே இறுக்கப் பிடித்து வைத்து இருக்கின்றன. அறிவில்லாமல் இயற்கையின் அடிமையாக மாறிவிடுவார்கள். இயற்கையின் பிடியிலிருந்து உடம்பை விடுவித்துக் கொண்டவர்கள் என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம் என்பதைச் சுதந்திரமாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். மற்றவரைப்போல எதுவும் புரியாமல் இயற்கை போட்ட வட்டத்திலேயே உழன்று கொண்டு இருக்கத் தேவையில்லை.

****

மன அழுத்தம் ...


பற்றற்ற நிலை:
எந்தவிதமான வேலையும் செய்யாமல் ஒரு நாளில் சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருங்கள். உங்களுள் எழும் எண்ணங்களில் பங்குபெறாமல், இருவர் பேசும் உரையாடலைக் கேட்பது போல இருங்கள். உங்களுள் ஏற்படும் எண்ணங்களை தவிர்க்காமல், எதிர்க்காமல் உங்கள் எண்ணங்கள் வெளிப்பட முழு சுதந்திரம் அளியுங்கள்.

மனோவேகம்:
பல காலங்களாக உங்கள் உள்ளத்தில் சேர்ந்துள்ள அனைத்து விதமான எண்ணங்களும் இதன் மூலமாக வெளிப்படும் வாய்ப்பு ஏற்படும். தேவையற்ற எண்ணங்களை வெளியேற்ற உங்கள் மனதிற்கு நீங்கள் சுதந்திரம் அளித்திருக்க மாட்டீர்கள். இது நம் எல்லோரிடமும் காணப்படுகின்ற இயல்பான ஒரு குணம். அவ்வாறான சுதந்திரத்தை உங்கள் எண்ணங்களுக்கு அளிக்கும் போது, அனைத்து விதமான தடைகளையும் தகர்த்தெறிந்து அவை வெளிப்படும்.

அமைதியாக உட்கார்ந்து அவைகளைக் கவனியுங்கள். அவ்வாறு வெளிவரும் எண்ணங்களை அமைதியாக கவனித்தல் எ‎ன்பது ஒரு கலை. தோன்றும் எண்ணங்களை அடக்கியாளப் பழகிய நமக்கு அவைகளை எதிர்க்கவோ, தவிர்க்கவோ தோன்றும் பழக்கங்களை மாற்ற முயலுங்கள்.

எண்ணங்களை வெளிப்படுத்துங்கள்:
நீங்கள் தனித்திருக்கும் போது உங்களுள் ஏற்படும் எண்ணங்களை உங்களுக்கு மட்டும் கேட்கும் வகையில் சொல்லிப் பழகுங்கள். அவ்வாறு செய்வதன் மூலமாக உங்கள் எண்ணங்கள் மேல் உங்களுக்கிருக்கும் பயம் மற்றும் அவநம்பிக்கை நீங்கும். மேலும் எண்ணங்களால் ஏற்படக்கூடிய விளைவுகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளப் பழகுவீர்கள். எண்ணங்களை நடுநிலையிலிருந்து உணர முடியும்.

இவ்வாறு செய்வதன் மூலம் மன அழுத்தம் நீங்கி மன அமைதி பெறலாம்.

காதல் என்றால் என்ன..?


ஆசிரியரிடம், "காதல் என்றால் என்ன?" என்றான் மாணவன்.
"இதற்கு நான் பதில் கூறவேண்டும் என்றால், வயல் வெளிக்கு சென்று, அங்குள்ள சோளத்தில், பெரிய சோளம் ஒன்றைக் கொண்டு வா...அப்பொழுது சொல்கிறேன்!" என்றார் ஆசிரியர்.

"ஆனால் ஒரு நிபந்தனை! ஒரு சோளத்தை ஒரு முறை தான் கடக்க வேண்டும். திரும்பி வந்து எடுக்கக் கூடாது." என நிபந்தனை போட்டார் ஆசிரியர்.

மாணவன், ஆசிரியர் சொன்னபடியே, பெரிய சோளத்தை தேட ஆரம்பித்தான். முதலில் ஒரு சோளத்தைப் பார்த்தான். அடுத்தது அதை விட பெரியதாக இருந்தது. இப்படி, அடுத்த சோளத்தைப் பார்த்ததும், அடுத்தது இதை விட பெரியதாக இருக்கும் என நினைத்து, ஒவ்வொன்றாக கடந்து சென்றான். வயல் வெளியை பாதி கடந்த சமயத்தில், தான் பெரிய சோளத்தை கடந்து வந்துவிட்டதாக உணர்ந்தான். நிபந்தனையின்படி, திரும்பி வரக் கூடாதே...அதனால், வெறும் கையுடன் வந்தான் மாணவன்.

"இது தான் காதல்! சிறந்த காதலை தேடிக் கொண்டே இருப்பார்கள். பிறகு மனம் தெளிந்து பார்க்கும்போது , அந்தக் காதலை தவற விட்டிருப்பார்கள்" என்றார் ஆசிரியர்.

( தேடி போய் அலைந்து, கடைசில, உள்ளதும் போன கதை ஆகிவிடாமல் பாத்துக்கணும்னு சொல்றார் வாத்தியார்)

"சரி,அப்படியென்றால், கல்யாணம் என்றால் என்ன?" என்றான் மாணவன்.
"இப்பொழுதும் நீ அதே தோட்டத்துக்கு சென்று பெரிய சோளத்தை கொண்டு வா! அதே நிபந்தனைகள் பொருந்தும்", என்றார் ஆசிரியர்.

கடந்த முறை செய்த தவறை மறுபடியும் செய்யக் கூடாது என்று நினைத்த மாணவன், வயல் வெளியை கொஞ்சம் கடந்த பிறகு, ஒரளவுக்கு உள்ள ஒரு சோளத்தை மிகவும் சந்தோஷமாக எடுத்துக் கொண்டு ஆசிரியரிடம் திரும்பினான் மாணவன்.

"பார். இந்த முறை நீ ஒரு சோளத்தோடு வந்திருக்கிறாய். அதுவும் உனக்கு பிடித்த, இது தான் அங்கு இருக்கும் சோளத்திலேயே பெரிய சோளம் என்ற நம்பிக்கையோடும்,திருப்தியோடும் வந்திருக்கிறாய். இது தான் கல்யாணம்", என்று முடித்தார் ஆசிரியர்.

பிடித்த நல்ல வாக்கியங்கள்..!


மனிதன் தானாகக் பிறக்கவில்லை; அதனால் அவன் தனக்காக வாழக் கூடாதவன்.
--தந்தை பெரியார்

நீ சொல்லுவதை மற்றவர்கள் ஏற்க மறுக்கலாம்; ஆனால் நீ நினைத்ததைச் சொல்லுவதற்கு உனக்கு உரிமை உண்டு.
--வால்டர்.

அன்பு கலாக்காமல் தரப்படும் உணவு சுவைக்காது; அது மனிதனின் பாதி பசியைத்தான் போக்கும்.
--கலில் கிப்ரான்

உங்களுக்கு எதை செய்யக்கூடாது என்று தோன்றுகிறதோ அதை பிறருடன் சேர்ந்து செய்யாதீர்கள்.
--சன்பூஷியஸ்

உலகை மாற்ற வேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்; ஆனால் எவரும் தன்னைத் திருத்திக் கொள்ள விரும்புவதில்லை.
--லியோ டால்ஸ்டாய்

எதிர்காலம் பற்றி எண்ணாதே; அது தானாக வரக்கூடியது.
--ஜான்சன்

மனிதன் எப்படிப் பிறந்தான் என்பதைக் பற்றி கவலை இல்லை; எப்படி வாழ்ந்தான் என்பதுதான் முக்கியம்.
--டாக்டர் ஜான்சன்

கடந்த காலத்தை மாற்றியமைக்க இறைவனுக்குக்கூட சக்தி கிடையாது.
--டிரைடன்

மனிதன் செலவழிப்பதிலேயே மதிப்பு வாய்ந்தது நேரம்.

மற்றவர்கள் செய்கின்ற தவறுகளை நீ செய்யாதே; நீயே சொந்தமாகச் செய்.
--பெர்னார்ட்ஷா

அழகிய முகம், பாதி வரதட்சிணைக்குச் சமம்.
--ஜெர்மானியப் பழமொழி

நம்மைத் தவிர, வேறு எவராலும் நமக்கு அமைதியைத் தேடித்தர முடியாது.
--எமர்சன்

மனிதன் இறப்ப்தற்காகப் பிறக்கிறான்; ஆனால், என்றும் வாழ்வதற்காக இறக்கிறான்.

இருள் வந்து விட்டதே என்று கவலைப்படாதீர்கள், இருள் வந்தால் தான் நட்சத்திரங்களை ரசிக்க முடியும்.
--சார்லன்-டி-விவர்ட்

வளமான காலத்தில் மற்றவர்கள் நம்மைத் தெரிந்து கொள்கிறார்கள்; வறுமை காலத்தில் நாம் மற்றவர்களை தெரிந்து கொள்கிறோம்.

தவறுக்கு நாம் கொடுக்கும் பெயர்தான் அனுபவம்.
--ஆஸ்கர் ஒயில்ட்

மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல, விடா முயற்சியால்தான்.
--எடிசன்

முடியாது என்று நீ சொன்ன எல்லாம் யாரே ஒருவன் எங்கோ செய்து கொண்டு இருக்கிறான்.
--டாக்டர் கலாம்

1. வதந்தி பேசாதீர்கள். அந்த நேரங்களில் மெலிதாய் புன்னகையுங்கள். புன்னகைத்துக் கொண்டே நடையை கட்டுங்கள்

2. உங்கள் அருகில் வம்பு பேச உங்களுக்கு கீழ்உள்ளர்களை அனுமதிக்காதிர்கள்

3. அடுத்தவரின் உணர்வுகளை அங்கீகரியுங்கள்

4. மற்றவரின் கருத்துக்களை மதித்து கேளுங்கள்

5. அவர்கள், குரலை உயர்த்திக் கருத்து சொல்ல அனுமதியுங்கள்

6. எதிராளி முட்டாள்தனமாய் பேசினாலும், அவர் புத்திசாலிதனமாக பேசுவது போல் உற்று கேளுங்கள்

7. மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களால் உங்கலுக்கு பாதிப்பு இல்லையென்றால் அதை ஒப்புக்கொள்ளுங்கள்

8. யாருடைய சுயமரியாதைக்கும் சவால் விடாதீர்கள்

9. எதிராளியுடனான பேச்சில் உங்களுக்கு பயங்கர கோபம் ஏற்பட்டால் உடனே அந்த இடத்தை விட்டு விரைந்து விடுங்கள்

10. உண்மை எல்லா இடங்களில் உதாவது என்பதை உணருங்கள்

11. மற்றவரிகளின் தகுதியை எடை போடாதீர்கள். அது பெரும்பாலும் தவறாக இருக்கும்

12. எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருப்பதாக காட்டி கொள்ளுங்கள்

13. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

14. அந்தரங்கமான விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

15. ஒருவரைப் பற்றிய உங்களின் அபிப்பிராயத்தை எக்காரணம் கொண்டும் அடுத்தவரிடம் சொல்லாதீர்கள்

16. மற்றவர்களை புகழ்வதற்கென்று தினமும் நேரம் ஒதுக்குங்கள்

17. தாழ்வு மனப்பான்மையுடன் எந்த செயலையும் அனுகாதிர்கள்

18. கிண்டல் மற்றும் கெட்டவார்த்தைகளை உச்சரிப்பதை தவிருங்கள்

19. முக்கியமான விசயங்களை பேசுவதற்கு முன்பு கொஞ்சநேரம் ரிலாக்ஸ் செய்யுங்கள்

20. உங்கள் எதிர்கால லட்சியத்தை பற்றி வாய்விட்டு அதிகமாக பேசாதீர்கள்

21. உங்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதாவது ஒரு நோக்கமிருக்கும் என்று மற்றவர்களை நம்ப செய்யுங்கள்

22. எதிராளி எப்படி பதில் பேசுவான் என்பதை கற்பனையில் சொல்லிப் பாருங்கள்

23. குற்றச்சாட்டை பகிரங்கப்படுத்தாதீர்கள்

24. கொஞ்சம் மெதுவாக உரத்தக் குரல் இல்லாமல் பேசுங்கள்

25. பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்

26. விட்டுக்கொடுங்கள்.

காதல்-அன்பு-


காதல். உலகையே ஆட்டிப்படைக்கும் உணர்வு முத்திரை. கவிஞர்களுக்கும் திரைக் கதாசிரியர்களுக்கும் நித்ய வார்த்தை. இளமையை கிறங்க வைக்கும் சத்திய போதை. முதுமையில் ஆதரவாய் நிற்கும் சித்திரச்சோலை.

loversdayபதின் பருவத்தில் காதலாக அறிமுகமாகும் உணர்வு, வாழ்வின் இறுதி வரை தனது உருவங்களை மாற்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மனித வாழ்வின் ஆகப்பெரும் அங்கீகாரமாக காதல் திகழ்கிறது. எனவேதான், காதலிக்கும் இதயத்தை விட, காதலிக்கப்படும் மனது கூடுதலாக துள்ளிக் குதித்து நர்த்தனமாடுகிறது.

அன்பு, பாசம், நேசம் என உறவுகளுக்கேற்ப உணர்வுகளுக்கு பெயர் வைக்கப்பட்டிருந்தாலும், காதலுக்குள் பொதிந்திருக்கும் மென்மையான பூப்போன்ற தன்மை தனித்துவமிக்கதாகவே அறியப்படுகிறது. சாதியாய், மதமாய், மொழியாய், இனமாய், உறவுகளாய் அடையாளம் காணப்பட்டு அதன் அடிப்படையில் உருவாகும் உணர்வை விட, இந்த கட்டுப்பாடுகளுக்குள் சிக்காத சுதந்திரப் பறவையாக காதல் சிறகடித்து பறக்கிறது என்பதலேயே அது தனி மகத்துவமும் பெறுகிறது.

ஆண்டாண்டு காலமாய் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், ஏன் கடவுளின் பெயராலும் சிறைப்பட்டுக் கிடந்த சமூகத்தை விடுவிக்க வந்த மகாத்மாவாக காதல் வீறுகொண்டு எழுகிறது. இதனாலேயே இக்காதலுக்கு எதிர்ப்பு வலுத்தும் வருகிறது. திரைப்படங்களில் காதலை எதிர்த்து கிளம்பும் வில்லன்கள் போன்றே, ஆங்காங்கேயிருந்து அணியணியாய் கும்பல் கும்பலாய் டாட்டா சுமோவில் ஏறி கிளம்புகிறார்கள். ஆக, காலமெல்லாம் வில்லன்கள் எதிர்த்துக் கொண்டே இருப்பதால், 'நாயக' அந்துஸ்து பெற்ற காதல், அமரத்துவம் எய்தி வாழ்ந்து கொண்டே வருகிறது. மனிதர்களை கூறு போடும் வேலிகளை கட்டுடைத்து மனங்களை ஒன்றுபடுத்தும் பணியையும் செய்து சமூகத்தை வாழ வைக்கவும் செய்கிறது.

தன் பாதையில் உள்ள மேடு, பள்ளங்களை அடித்துச் செல்லும் காற்றாற்று வெள்ளம் போன்று காதல் பிரவாகம் எடுத்து ஓடிக்கொண்டே இருக்கிறது. இதனால் மனிதர்களுக்குள்ள வேறுபாடுகளை வடிவமைத்து வரும் பிற்போக்கு கசடுகள் அடித்துச் செல்லப்படுகிறன. கடவுளின் பெயரால் தான் வயிறு வளர்க்க சாதிய படி நிலையை கட்டமைத்துள்ள வருணாசிரமத்தை, மனு (அ)நீதியை காதல் என்னும் மெல்லிய, ஆனால் கூர்மையான ஆயுதம் உடைத்து எறிகிறது. இதனை எந்த சனாதானியால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்? சமூக முரண்பாடுகளையே மூலதனமாகக் கொண்டு பிழைப்பு நடத்துவோர்களுக்கு, சமுதாயம் சமத்துவத்தை நோக்கி அடிஎடுத்து வைப்பதை எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியும்?

பெரியார் உள்ளிட்ட உன்னதத் தலைவர்களின் போராட்டத்தால், சமீபத்தில்தான் சுதந்திரக் காற்றை சற்றேனும் சுவாசிக்கத் துவங்கிய பெண்களை எதிர்த்தும், பெண்ணியத்தை ஒடுக்கவும் கும்பல் கும்பலாக கிளம்பி இருக்கிறார்கள். 'விடாதே பிடி', 'அடி', 'காதலை அனுமதிக்காதே' எனக் கிளம்பிய இவர்கள், கலாச்சாரம், பண்பாடு, ஒழுக்கம் என்ற பெயர்களில் ஒளிந்து கொண்டு வேலாயுதம், சூலாயுதம் ஆகியவற்றை தூக்கிக் கொண்டு புறப்பட்டிருக்கிறார்கள். சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை அவமானகரமான 'தேவதாசி' முறையையும், மனிதாபிமானமற்ற 'சதி' முறையையும் புனிதமாகக் கொண்டாடியவர்கள், இப்போதும் கூட அவற்றை ஆதரிப்பவர்கள், பண்பாடு குறித்து பேசுவதையும், அதற்காக போராடுவதாகக் கூறுவதையும் பார்த்து காலம் கைகொட்டி சிரிக்கிறது.

ஆயினும் எப்போதும் போன்று எது குறித்தும் கவலைப்படாத விஷ்வ இந்து பரிஷத், ராம்சேனா எனப் பலப்பெயர்களில் உலாவும் ஆர்எஸ்எஸ் பெத்தெடுத்துள்ள சங்பரிவாரக் கும்பல் தங்களது காதல் எதிர்ப்பு அஜெண்டாக்கள் மீது தீராத காதலோடு அலைந்துகொண்டே இருக்கிறது.

வரதட்சணை எனும் கொடிய விஷத்தாலும், ஜாதகங்கள் கூறும் தோஷத்தாலும் ஒரு பக்கம் முதிர் கன்னிகளின் எண்ணிக்கை சத்தமில்லாமல் பெருகி வருவதை, சங்பரிவாரங்கள் போற்றும் பாரதமாதா கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், பரிதாபத்துக்குரிய அப்பெண்களின் திருமணத் தடையை நீக்க முன்வராத இந்த மதக்காதல் வெறியர்கள், காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்களுக்கு கட்டாய பதிவுத் திருமணம் செய்யப் போவதாகவும், 'தாலியைக் கட்டு அல்லது ராக்கியைக் கட்டு' எனவும் கூச்சநாச்சமின்றி பிதற்றி வருகின்றனர். அதிலும் இந்தாண்டு காதலர் தினம் சனிக்கிழமை வந்துவிட்டதால், பதிவாளர் அலுவலகங்கள் திறந்திருக்காது என தாமதமாகத் தெரிந்துகொண்ட ராம்சேனாவின் தலைவர் முத்தாலிக், காதலர்களை போலீசில் பிடித்துக் கொடுக்கப் போவதாக பூச்சாண்டி காட்டுகிறார். தமிழக பாஜகவின் சார்பில் இல.கணேசனும் காதலர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இவர்களுக்கு மத்தியில்தான் காதலர் தினம் ஆண்டுதோறும் வெற்றிகரமாகக் கடந்து போய் கொண்டே இருக்கிறது. புனித வாலெண்டைன் எனும் பாதிரியாரின் நினைவாக பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வாலெண்டைன் பாதிரியார் குறித்து ஆய்வுகளில் இறங்கினால், வரலாறு நெடுகிலும் ஆங்காங்கே சில வாலெண்டைன்கள் உலவுகின்றனர். இக்காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு காரணமான வாலெண்டைன் யார் என்பதும் இன்னும் மர்ம முடிச்சாகவே காணப்படுகிறது. ஆயினும் வாலெண்டைன் குறித்தான கதைகள் சுவாரஸ்யமாகவே உள்ளன.

மூன்றாம் நூற்றாண்டு காலத்தில் ரோம் நாட்டை ஆண்ட கிளாடியஸ் மன்னன், போர் வீரர்களின் திறன்களை காக்கும் பொருட்டு(!), அவர்கள் திருமணம் செய்து கொள்வதை தடை செய்திருந்தான். இத்தகைய முட்டாள்தனமான முடிவுக்கு எதிராக கிளம்பிய பாதிரியார் வாலெண்டைன், ராணுவ வீரர்களுக்கு ரகசியமாகத் திருமணம் செய்து வைத்துள்ளார். இதைத் தெரிந்து கொண்ட மன்னன், வாலெண்டைனை சிறையில் அடைத்து மரண தண்டனை விதித்தார் என ஒரு கதை கூறுகிறது. மற்றொரு கதையோ, தன்னை மதம் மாற்ற முயன்ற மன்னனது உத்தரவுக்குக் கீழ்படியாததால், பாதிரியார் வாலெண்டைனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகவும் கூறுகிறது. இதுபோன்று பல கதைகள் கூறப்பட்டாலும், அனைத்து கதைகளுமே வாலெண்டைன் ஓர் ஒப்பற்ற தியாகி என்னும் ஒற்றை வரியில் ஒன்றுபட்டு நிற்கின்றன. இது ஒன்று போதுமே, அவரது நினைவைப் போற்றும் வகையில் காதலர் தினம் கொண்டாட, என காதலர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகிறார்கள். தனிநபர் மீதோ, மனித சமூகத்தின் மீதோ ஏற்படும் உச்சப்பட்ச காதல்தானே தியாகமாக மாறுகிறது!

உலகமயமான சூழ்நிலையில் வர்த்தக நோக்கமும் காதலர் தினத்தை பெரிதும் முன்னெடுத்துச் செல்கிறது. கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு அடுத்ததாக காதலர் தினத்துக்குத்தான் அதிகளவில் வாழ்த்து அட்டைகள், பரிசுப் பொருட்கள் வியாபாரம் நடப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிப்பது, வர்த்தகத்தின் பங்களிப்பையும் உறுதி செய்துகிறது. நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சியை சந்தித்து வரும் இளைய தலைமுறை தெளிவாகவே செல்கிறது. மரத்தைச் சுற்றி டூயட் பாடுவதல்ல காதல் என்பதை புரிந்தே இருக்கிறது. காதல் வழியான திருமணமானாலும், அதற்கு வாய்ப்பில்லாத நிலையில், திருமணம் வழியாக வந்த காதலானாலும், காதல் மனிதர்களைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. சமூக, பொருளாதார அடிப்படையில் பல்வேறு மனோவியல் பிரச்சனைகளையும் காதல் சந்திக்கிறது. அப்பிரச்சனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதையும் பார்த்துக் கொண்டுள்ள அதற்கு, அதனை வெல்லும் திறனும் இருக்கிறது.

உயிர் உற்பத்திக்கு மட்டுமின்றி, மனிதனை மனிதனாக உயிர்ப்பு செய்ய வைக்கும் மாயவித்தையை காதல் காலம் தோறும் நிகழ்த்திக் கொண்டேதான் போகிறது. மனித குலத்தின் விடுதலைக்காக செதுக்கப்பட்ட தத்துவத்தை உலகிற்கு அளிக்க மார்க்ஸ்க்கு ஜென்னியின் காதல் உத்வேகம் அளித்ததைப் போன்று, சமூகத்தின் ஏற்றத்தாழ்வை நீக்கும் மந்திர மருந்தை அட்சயப் பாத்திரத்தில் ஏந்திய காதல் உலகையே சுற்றி வருகிறது. கண்ணம்மாவின் எட்டையபுரத்து காதலன் குரல் உரத்துக் கேட்கிறது.

"அன்பு வாழ்கவென்றமைதியில் ஆடுவோம்
ஆசைக் காதலைக் கைக்கொட்டி வாழ்த்துவோம்"

Tuesday, April 26, 2011

இன்றைய காதல்


மனம் வசப்பட்டதால் ஏற்பட்ட காதல் -அன்று!
சதைவசப்பட்டதால் ஏற்பட்ட காதல் - இன்று
அன்றய காதல் கல்லறயில் அல்லது
கல்யாணத்தில் முடியும்!
இன்று பல காதல் சில்லறையில் அல்லது
சில அறையில்!முடியும்.!

--ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன்

காதல் ...


இன்றைய தினம் காதலைப் பற்றி பேசுகிறவர்கள். “காதலென்பது அன்பல்ல, ஆசையல்ல, காமமல்ல என்றும் அன்பு, நேசம், ஆசை, காமம், மோகம் என்பவை வேறு, காதல் வேறு என்றும், “அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக ஏற்படுவதாகும்” என்றும், அதுவும் “இருவருக்கும் இயற்கையாய் உண்டாகக் கூடியதாகும்” என்றும் “அக்காதலுக்கு இணையானது உலகத் தில் வேறு ஒன்றுமேயில்லை” என்றும்,“அதுவும் ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் , ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரந்தான் இருக்க முடியும்” என்றும், அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக- இருவருக்கும் ஒரு காலத்தில் காதல் ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம் கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல் மாறவே மாறாது” என்றும், பிறகு வேறொருவரிடமும் காதல் ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க முடியாது; அதை விபச்சாரமென்று தான் சொல்ல வேண்டுமே ஒழிய அது ஒருக்காலும் காதலாகாது” என்றும், மற்றும் “ஒரு இடத்தில் உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால், பிறகு யாரிடமும் காமமோ, மோகமோ, விரகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றன.

மேலும் ,இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும், ஒரு மனைவி ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியது என்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப் படுத்தியும் வரப்படு கின்றது.

இப்படிப்பட்ட காதலானது ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ எப்படி உண்டாகின்றது? இது தானாகவே உண்டாகின்றதா? அல்லது மூன்றாவது மனிதனுடைய பிரவேசத்தைக் கொண்டு உண்டாகின்றதா? ஒரு சமயம் தானாகவே உண்டாவதாயிருந்தால் எந்தச் சந்தர்ப்பத்தில், எந்த ஆதாரத்தின்மீது என்பவைகளைக் கவனித்தால் பெண் ஆணையோ, ஆண் பெண்ணையோ தானே நேரில் பார்த்தாலும், அல்லது தான் மூன்றாவது மனிதர்களால் கேள்விப்படுவதாலும், உருவத்தையோ, நடவடிக்கையையோ, யோக்கியதையையோ வேறு வழியில் பார்க்கக் கேட்க நேரிடுவதாலுமே தான் உண்டாகக் கூடுமே தவிர இவைகள் அல்லாமல் வேறு வழியாக என்று சுலபத்தில் சொல்லிவிட முடியாது.

உண்மைக் காதல் என்பது ஒருவரை ஒருவர் பார்த்தவுடன் உண்டாகுமா? அல்லது கொஞ்ச நாளாவது பழகியவுடன் உண்டாகுமா? பார்த்ததும் ஏற்பட்ட காதல் உயர்வானதா? அல்லது சிறிது நாள் பழகியபின் ஏற்படும் காதல் உயர்வானதா? சரீரத்தைக்கூடச் சரியாய் தெரிந்து கொள்ளாமல் தூர இருந்து பார்ப்பதாலேயே ஏற்படும் காதல் நல்லதா? அல்லது சரரத்தின் நிலை முதலியவைகள் தெரிந்து திருப்தி அடைந்த காதல் நல்லதா? என்பவைகளை கவனிக்கும்போது சரீர மாறுபாடாலும், பொருத்தமின்மையாலும் ஏன் எப்படிப்பட்ட உண்மைக் காதலும் மாறமுடியாது? என்பதற்கு என்ன விடை பகர முடியும்? அல்லது உண்மையாகவே ஒருத்தன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டால் ஒருத்தி தப்பாய் அதாவது வேறு ஒருவனிடம் காதல் கொண்டுவிட்டதாய் கருத நேர்ந்தால் அது பொய்யா கவோ, மெய்யாகவோ இருந்தாலும் தன் மனதுக்கு சந்தேகப் படும்படி விட்டால் அப்போது கூட காதல் மாறாமல் இருந்தால் தான் உண்மைக்காதலா? அல்லது தன் மனம் சந்தேகப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடிய காதல் குற்றமான காதலா? என்பதற்கு என்ன மறுமொழி பகரமுடியும்.

காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப் பான்மை, பக்குவம், லட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு, கொஞ்சகாலம் கழிந்தபின் இயற்கையாகவே பக்குவம் நிலைமை லட்சியம் மாறலாம். இந்த மாதிரி சந்தர்ப்பங் களிலும் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியது தானா என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம்...

ஒரு ஜதை காதலர்களில் அவ்விருவரும் ஞானிகளாய் துறவிகளாய் விட்டார்களானால் ,இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் பிரிவதும், வெறுப்பதும் காதலுக்கு விரோதமாகுமா? விரோதமானால் அப்படிப்பட்ட காதல் பயன்படுமா? விரோத மில்லையானால் ஒருவர் ஞானியாகி துறவியாகி விட்டதால் மற்றவரை விட்டுப் பிரிந்து கொள்ளுவது காதலுக்கு விரோத மாகுமா? என்பதும் கவனித்தால் காதலின் யோக்கியதை விளங்கா மல் போகாது. பொதுவாக மனித ஜீவன் ஒன்றைப் பார்த்து நினைத்து ஆசைப்படுவதும் ஒன்றினிடம் பலதினிடம் அன்பு வைப்பதும் நேசம் காட்டுவதும் இயற்கையேயாகும்.

அதுபோலவே ,மனிதனுக்குத் தானாகவே எதிலும் விரக்தி வருவதும், வெறுப்புக்கொள்வதும், பிரிவதும் இயற்கையேயாகும். பெலவீனமாய் இருக்கும்போது ஏமாந்து விடுவதும் உறுதி ஏற்பட்டபின்பு தவறுதலைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதும், அனுபவ ஞானமில்லாதபோது கட்டுப்பட்டுவிடுவதும் அனுபவம் ஏற்பட்ட பிறகு விடுதலை செய்து கொள்ளுவதும் இயற்கையே யல்லவா?.

உதாரணமாக ஒரு வாலிபன் ஏமாந்து ஒரு தாசியிடம் காதல் கொண்டு சொத்துக்களை யெல்லாம் கொடுத்து விடுவதைப் பார்க்கின்றோம். அந்த வாலிபனுக்கு அந்த தாசியிடம் ஏற்பட்டது காதல் என்பதா? அல்லது காமம் என்பதா? அதே தாசி சில சமயத்தில் தனக்குத் தாசித் தொழில் பிடிக்காமல் இந்த வாலிபனி டமே நிரந்தரமாயிருந்து காலத்தைக் கழிக்கலாம் என்று கருதி விடுவதைப் பார்க்கின்றோம். ஆகவே, இந்த தாசி கொண்டது காதலா அல்லது வாழ்க்கைக்கு ஒரு சௌகரியமான வழியாய் இதை வாலிபன் அறியாமல் நேசத்தை வளர்த்துக்கொண்டே வந்தால் இது ஒத்த காதலாகி விடுமா? இப்படியெல்லாம் பார்த்தால் காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளைவிட சிறிதுகூட சிறந்தது அல்லவென்பது விளங்கி விடும். அதற்கு ஏதேதோ கற்பனைகளை கற்பித்து ஆண்- பெண்களுக்குள் புகுத்தி விட்டதால் ஆண், பெண்களும் தங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டு மென்று கருதி- எப்படி பக்திமான் என்றால் இப்படி இப்படி எல்லாமிருப்பான் என்று சொல்லப்பட்டதால், அனேகர் தங்களைப் பக்திவான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதி பூச்சுப் போடுவதும் பட்டை நாமம் போடுவதும் , சதா கோவிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி அழுவதும் வாயில் சிவசிவ என்று சொல்லிக்கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்து பக்தி மான்களாகக் காட்டிக்கொள்ளுகின்றார்களோ அது போலும், எப்படிக் குழந்தைகள் தூங்குவது போல் வேஷம் போட்டு கண்களை மூடிக்கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காக “தூங்கினால் கால் ஆடுமே” என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைக்கவேண்டுமென்று கருதி காலைச் சிறிது ஆட்டுமோ அதுபோலும், எப்படி பெண்கள் இப்படி இப்படி இருப்பதுதான் கற்பு என்றால், பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாய் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகின்றார்களோ அது போலும், உண்மையான காதல்களானால் இப்படி இருப்பார்களே என்று சொல்லி விட்டால் அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்து விட்டால் அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகிறார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேஷத்தையெல்லாம் போடுகிறார்கள். அதை விவரிப்பது என்றால் மிகவும் பெருகிவிடும்.

ஆகவே , ஆசையை விட, அன்பை விட, நட்பை விட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும்; அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அஃறிணைப் பொருள்கள் இடத் திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவது போல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக் கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவை யில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும்; அவ்வறிவும் நடவடிக்கை யும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக்கூடிய தென்றும்; அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாறவேண்டியது தான் என்றும், மாறக் கூடியது தான் என்றும் நாம் கருதுகின்றோம். ஆகவே இதிலிருந்து நாம் யாரிடமும் அன்பும் ஆசையும் நட்பும் பொருளாகக் கொண்ட காதல் கூடாதென்றோ, அப்படிப்பட்டதில்லை என்றோ சொல்ல வரவில்லை.

ஆனால், அன்பும், ஆசையும், நட்பும் மற்றும் எதுவானாலும் மன இன்பத்திற்கும், திருப்திக்குமேயொழிய, மனதிற்குத் திருப்தியும், இன்பமும் இல்லாமல் அன்பும், ஆசையும், நட்பும் இருப்பதாய் காட்டுவதற்காக அல்ல என்பதை எடுத்துக் காட்டு வதற்காகவே இதை எழுதுகின்றோம்...

இதுவும் ஏன் எழுதவேண்டி யதாயிற்று என்றால் மற்றவர்கள் திருப்தியிலும், சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதிற்கெல்லாம் ‘இது காதலல்ல’ ‘அது காதலுக்கு விரோதம்’ ‘அது காம இச்சை’ ‘ இது மிருக இச்சை’ என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒரு வித பொறுப்புமில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்று பார்த்துவிடலாம் என்றே இதைப்பற்றி எழுதலானோம்.

--- பெரியார்.

செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை...


நம் நாட்டில் தற்போது 15 செல்போன் சேவை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றுள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் நீங்கலாக இதர நிறுவனங்கள், சென்ற ஏப்ரல் மாதத்தில், ஒட்டுமொத்த அளவில் 1.12 கோடி புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளன. இவர்கள் அனைவரும் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்தில் புதிதாக இணைப்புகளைப் பெற்றுள்ளனர். மார்ச் மாதத்தில் புதிய வாடிக்கையாளர்களின் (ஜி.எஸ்.எம்+சி.டீ.எம்.ஏ) மொத்த எண்ணிக்கை 2.03 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு ஆண்டு மார்ச் வரையிலான 12 மாதங்களில், இந்திய செல்போன் சேவை நிறுவனங்கள் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 1.60 கோடி புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளன. இந்திய செல்போன் சேவை துறையில் பாரதி ஏர்டெல் நிறுவனம், 30.16 சதவீத சந்தை பங்களிப்பை பெற்று முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் 30 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 13.06 கோடியாக உயர்ந்துள்ளது. செல்போன் சேவையில் இரண்டாவது இடத்தில் உள்ள வோடாபோன் நிறுவனம், ஏப்ரல் மாதத்தில் 29 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. தற்போது இந்நிறுவனம் மொத்தம் 10.38 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. ஐடியா செல்லுலார் நிறுவனம் 15 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. ஏர்செல் நிறுவனம் 16 லட்சம் புதியவர்களைப் பெற்றுள்ளது. தற்போது இந்த நிறுவனங்கள் முறையே 6.53 கோடி மற்றும் 3.85 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளன. ஏர்செல் நிறுவனம் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளது. சென்ற மாதத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்கள் முறையே 12.50 லட்சம் மற்றும் 33,217 புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளன. பீ.எஸ்.என்.எல். தற்போது 6.47 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. எம்.டி.என்.எல். வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 48 லட்சமாக உள்ளது.

பெண்கள்....

அழகுப் பெண்களுக்கு சில `அபூர்வ’ குணங்களும் இருக்கும். அவர்கள் மனதின் ஆழத்தை அவ்வளவு எளிதாக அளந்து சொல்லிவிட முடியாது. பெண்களின் குணநலன் பற்றி ஆராய்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர், `பெண்கள் பொய் சொல்வதை நிறுத்தவே மாட்டார்கள்’ என்று கண்டுபிடித்துள்ளார்.


இங்கிலாந்து பெண் ஆய்வாளரான மேரி கோல்டு தனது ஆராய்ச்சி முடிவாக வெளியிட்ட சில பெண் ரகசியங்கள்…:)

பெண்கள், தன் கணவரிடம் தினமும் குறைந்தபட்சம் 3 பொய்கள் சொல்கிறார்களாம். இப்படிப் பொய் சொல்லாத பெண் ஒருவர் கூட இல்லை என்பதுதான் ஆய்வில் கிடைத்த அதிர்ச்சிட்டும் உண்மை!

ஆய்வின்படி பெண்கள் 3 விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறு விஷயங்களில் தவறு நடந்துவிட்டால் கூட உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அனேக பெண்களின் வாடிக்கை. இவர்கள் ஒரு வகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின் காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள். வஞ்சகமாகப் பொய் சொல்வது மூன்றாம் வகையினர்.

பெண்கள், சாதாரணமாக சிராய்ப்புக் காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக் காரணத்தைச் சொல்ல மாட்டார்கள். `செல்போன் பில் அதிகம் வருகிறது’ என்று கணவர் கண்டித்தால் கொஞ்ச நேரம் அமைதி காத்துவிடும் பெண்கள், அதற்குப் பிறகு சிடுசிடுப்பாகி `சீப்’பான பொய்களைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்களாம். அதாவது சிறிது நேரம் கழித்து கணவர் `என்னுடைய மஞ்சள் சட்டை எங்கே இருக்கிறது’ என்று கேட்டால், `அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது’ என்று மழுப்பலான பதிலைச் சொல்கிறார்களாம். ஆனால் அந்தச் சட்டையை சலவைக்கு கொடுத்திருப்பார்கள் அல்லது அலமாரியில் எடுத்து வைத்திருப்பார்கள் என்பதுதான் உண்மையாக இருக்கும்.

இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் அதிகம் பொய் சொல்லும் பெண்கள் அதை ஒரு தவறாக எடுத்துக் கொள்வதோ, ஏமாற்றுகிறோம் என்று கவலைப்படுவதோ கிடையாதாம். ஆனாலும் பெண்களின் பல பொய்கள் கணவன்- மனைவி உறவை வலுப்படுத்து வதற்காகச் சொல்லப்படுபவையாகவே உள்ளன என்றும் ஆய்வாளர் குறிப்பிடுகிறார்.

பெண்கள் உள்ளுணர்வு...


பார்த்த முதல் பார்வையிலேயே காதல் பிறந்துவிட்டது’ என்பதை நம்பாமல் கிண்டலடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பெண்கள் 3 நிமிடங்களில் தங்களுக்குச் சரியான ஆண்களைத் தேர்ந்தெடுத்துவிடுகிறார்கள் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

ஒரு பெண், மூன்றே நிமிடங்களில் ஓர் ஆணின் தோற்றம், உடல் கட்டுமானம், ஆடை அணியும் ரசனை, மணம், வார்த்தை உச்சரிப்பு, மொழித் திறன் ஆகியவற்றை அளவிட்டு விடுகிறாளாம்.

பெண் தனது தோழிகளுடன் குறிப்பிட்ட ஆண் எப்படி உரையாடுகிறான், அவன் வெற்றிகரமானவனா, லட்சியம் மிக்கவனா என்றும் குறுகிய நேரத்துக்குள் கணித்து விடுகிறாளாம். ஒரு நபர் தனக்குப் பொருத்தமானவரா, இல்லையா என்று தீர்மானிப்பதற்கு 180 நொடிகள் போதும் என்று பெண்கள் கருதுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஓர் ஆணைப் பற்றிய தனது முதல் அபிப்பிராயத்தை பெண்கள் மாற்றிக்கொள்வதும் அரிது என்று தெரியவந்திருக்கிறது. தங்களின் கணிப்பும், தீர்ப்பும் சரியாகத்தான் இருக்கும் என்பது பெண்களின் உறுதியான எண்ணம்.

மூவாயிரம் பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்ட பென் கே, “ஆண்களுடன் பழகுவதில் பெரும்பாலான பெண்கள் தங்கள் உள்ளுணர்வை நம்புகிறார்கள். அது ஏதோ வெகு ஆழத்திலிருந்து வருவது போலத் தோன்றுகிறது. ஒரு மாயாஜாலம் போல அது பெரும்பாலும் சரியாகவும் இருக்கிறது. ஆனால் பெண்கள் மிக விரைவாக முடிவெடுப்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம். ஆண் ஒருவனுடன் சேர்ந்து ஒரு பானம் பருகி முடிப்பதற்குள்ளாகவே அவன் நல்லவனா, கெட்டவனா, தனக்குப் பொருத்தமாக இருப்பானா, இல்லையா என்று பெண் முடிவு செய்துவிடுவது உண்மையிலேயே வியப்பான ஒன்றுதான்!” என்கிறார் திகைப்பாக.

அப்படியானால், ஆண்களிடம் பெண்கள் ஏமாறும் செய்திகள் எல்லாம் வருவது எப்படி?

Benefits of lemon.

Lemon (Citrus) is a miraculous product that kills cancer cells.

It is 10,000 times stronger than chemotherapy.

Why do we not know about that?
Because there are laboratories interested in making a synthetic version that will bring them huge profits. You can now help a friend in need by letting him know that lemon juice is beneficial in preventing the disease. Its taste is pleasant and it does not produce the horrific effects of chemotherapy. If you can, plant a lemon tree in your garden or patio.

How many people die while this is a closely guarded secret so as not to jeopardize
the beneficial multimillionaires' large corporations?

As you know, the lemon tree is small, does not occupy much space and is known for its varieties of lemons and limes. You can eat the fruit in different ways: you can eat the pulp, juice press, prepare drinks, sorbets, pastries. It is credited with many virtues, but the most interesting is the effect it produces on cysts and tumors.

This plant is a proven remedy against cancers of all types. Some say it is very useful in all variants of cancer. It is considered also as an anti microbial spectrum against bacterial infections and fungi, effective against internal parasites and worms, it regulates blood pressure that is too high and is an antidepressant, it combats stress and nervous disorders.

The source of this information is fascinating: it comes from one of the largest drug manufacturers in the world, says that after more than 20 laboratory tests since 1970, the extracts revealed that: It destroys the malignant cells in 12 cancers, including colon, breast, prostate, lung and pancreas. The compounds of this tree act showed 10,000 times better than the product Adriamycin, a drug normally used chimiothérapeutte in the world, slowing the growth of cancer cells. And what is even more astonishing: this type of therapy with lemon extract not only destroys malignant cancer cells and does not affect healthy cells.

Wednesday, April 20, 2011

முன்னோர் அறிவுரை...

இன்றைய யுகத்தில், விஞ்ஞான வளர்ச்சியை நாம் பெருமளவில் நம்பினாலும், முன்னோர் அறிவுரைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். இல்லையெனில், நமக்கு பேரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதற்கு, சமீபத்திய உதாரணம் ஜப்பான்.

ஆம். உலகில் முதியவர்கள் அதிகம் உள்ள நாடு ஜப்பான். இங்கு, சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றால், நாட்டின் வடகிழக்குப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுவரை 12 ஆயிரத்து 500 பேர் இறந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக மாறியுள்ளனர். நாட்டின் வடகிழக்கில் உள்ளது மியாகோ நகரம். இதை சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில், பல நூற்றாண்டுகளாக, சுனாமி தாக்குதல் ஏற்படுவது வழக்கம்.

இது குறித்து எதிர்கால மக்களை எச்சரிக்கும் நோக்கில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அங்குள்ள அனேயாசி கடற்கரையில் கல்வெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி நடக்காதது எவ்வளவு பெரிய தவறு என அப்பகுதி மக்கள் தற்போது சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு உயரங்களில், வடிவங்களில் இருக்கும் இந்த கல்வெட்டுகளில், "இங்கு சுனாமி பாதிப்பு உண்டு, நிலநடுக்கம் வந்தால், சுனாமியும் வரும். எச்சரிக்கையாக இரு' என்றும், "உயர்ந்த பகுதியில் வசிப்பதே, அமைதியான வாழ்வுக்கு உகந்தது, கல்வெட்டு அமைந்துள்ள இடத்தை தாண்டி, குடியிருப்பை ஏற்படுத்தினால் பேராபத்து நேரிடும்' என்றும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அதுபோல், எந்தெந்த பகுதியில் சுனாமி தாக்கக் கூடும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எந்த பகுதியில் வசித்தால், பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பற்றி குறிப்பிடவில்லை.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த, 12 வயது சிறுவன் யூது கிம்யூரா கூறுகையில், "இந்த கல்வெட்டுகள் பற்றி நாங்கள் பாடங்களில் படித்துள்ளோம். இவை 600 ஆண்டுகள் பழமையானவை. எங்கள் பகுதி சிறுவர்கள் அனைவருக்கும் இது பற்றி தெரியும்' என்றான். அதே பகுதியில் வசிக்கும் ஐசாமு என்பவர் கூறும்போது, "கடந்த 1896ம் ஆண்டு, பெரும் சுனாமி தாக்கியதை தொடர்ந்து, எங்கள் முன்னோர், மேட்டுப் பகுதியில் குடியேறினர். நாங்களும் அவர்கள் வழியையே பின்பற்றுகிறோம். என்றாலும், கல்வெட்டில் கூறியுள்ளதையும் மீறி, இங்குள்ள சிகெய் கடற்பகுதியில் ஏராளமான பள்ளி மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் நிறுவப்பட்டன. அனைத்தும் தற்போது தரைமட்டமாகி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தான் மிச்சம். கல்வெட்டு வாசகங்கள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் மீண்டும் புதுப்புது கட்டடங்கள் இப்பகுதியில் நிறுவப்படும்' என்றார்.

கோயில்கள்

Details about Temples: click the following link... very nice..

http://temple.dinamalar.com/

Tuesday, April 19, 2011

Some Interesting Facts.....!!

If you are right handed, you will tend to chew your food on the right side of your mouth. If you are left handed, you will tend to chew your food on the left side of your mouth.

To make half a kilo of honey, bees must collect nectar from over 2 million individual flowers

Heroin is the brand name of morphine once marketed by 'Bayer'.

Tourists visiting Iceland should know that tipping at a restaurant is considered an insult!

People in nudist colonies play volleyball more than any other sport.

Albert Einstein was offered the presidency of Israel in 1952, but he declined.

Astronauts can't belch - there is no gravity to separate liquid from gas in their stomachs.

Ancient Roman, Chinese and German societies often used urine as mouthwash.

The Mona Lisa has no eyebrows. In the Renaissance era, it was fashion to shave them off!

Because of the speed at which Earth moves around the Sun, it is impossible for a solar eclipse to last more than 7 minutes and 58 seconds.

The night of January 20 is "Saint Agnes's Eve", which is regarded as a time when a young woman dreams of her future husband.

Google is actually the common name for a number with a million zeros

It takes glass one million years to decompose, which means it never wears out and can be recycled an infinite amount of times!

Gold is the only metal that doesn't rust, even if it's buried in the ground for thousands of years

Your tongue is the only muscle in your body that is attached at only one end

If you stop getting thirsty, you need to drink more water. When a human body is dehydrated, its thirst
mechanism shuts off.

Each year 2,000,000 smokers either quit smoking or die of tobacco-related diseases.

Zero is the only number that cannot be represented by Roman numerals

Kites were used in the American Civil War to deliver letters and newspapers.

The song, Auld Lang Syne, is sung at the stroke of midnight in almost every English-speaking country in the world to bring in the new year.

Drinking water after eating reduces the acid in your mouth by 61 percent

Peanut oil is used for cooking in submarines because it doesn't smoke unless it's heated above 450°F

The roar that we hear when we place a seashell next to our ear is not the ocean, but rather the sound of blood surging through the veins in the ear.

Nine out of every 10 living things live in the ocean

The banana cannot reproduce itself. It can be propagated only by the hand of man

Airports at higher altitudes require a longer airstrip due to lower air density

The University of Alaska spans four time zones

The tooth is the only part of the human body that cannot heal itself.

In ancient Greece, tossing an apple to a girl was a traditional proposal of marriage. Catching it meant she accepted.

Warner Communications paid $28 million for the copyright to the song Happy Birthday.

Intelligent people have more zinc and copper in their hair.

A comet's tail always points away from the sun

The Swine Flu vaccine in 1976 caused more death and illness than the disease it was intended to prevent

Caffeine increases the power of aspirin and other painkillers, that is why it is found in some medicines.

The military salute is a motion that evolved from medieval times, when knights in armor raised their visors to reveal their identity.

If you get into the bottom of a well or a tall chimney and look up, you can see stars, even in the middle of the day.

When a person dies, hearing is the last sense to go. The first sense lost is sight

In ancient times strangers shook hands to show that they were unarmed

Strawberries are the only fruits whose seeds grow on the outside

Avocados have the highest calories of any fruit at 167 calories per hundred grams

The moon moves about two inches away from the Earth each year

The Earth gets 100 tons heavier every day due to falling space dust

Due to earth's gravity it is impossible for mountains to be higher than 15,000 meters

Mickey Mouse is known as "Topolino" in Italy

Soldiers do not march in step when going across bridges because they could set up a vibration which could be sufficient to knock the bridge down

Everything weighs one percent less at the equator

For every extra kilogram carried on a space flight, 530 kg of excess fuel are needed at lift-off

The letter J does not appear anywhere on the periodic table of the elements.

Sunday, April 17, 2011

BEAUTY TIPS - For attractive Lips..

Speak words of kindness.

For lovely eyes,
Seek out the good in people.

For a slim figure, Share your food with the hungry.

For beautiful hair, Let a child run his or her fingers through it once a day.

For poise, Walk with the knowledge you'll never walk alone.

People, even more than things, have to be restored, renewed, revived,
reclaimed, and redeemed; Never throw out anybody.

Remember, If you ever need a helping hand, you'll find one at the end of your arm.

As you grow older, you will discover that you have two hands, one for
helping yourself, the other for helping others.

The beauty of a woman is not in the clothes she wears,
The figure that she carries, or the way she combs her hair.

The beauty of a woman must be seen from in her eyes,
because that is the doorway to her heart,
the place where love resides.

The beauty of a woman is not in a facial mole,
but true beauty in a woman is reflected in her soul.

It is the caring that she lovingly gives,
the passion that she shows,
And the beauty of a woman with passing years-only grows!

Friday, April 8, 2011

அலெக்சாண்டரும் கடற்கொள்ளைக்காரனும் ....


மாவீன் அலெக்சாண்டர் முன்னே டியோண்ட்ஸ் என்னும் கடற்கொள்ளைக்காரன் கைது செய்யப்பட்டு விசாரணைக்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான். அலெக்சாண்டர் அவனைப் பார்த்து, “நீ எந்தத் துணிவுடன் நாசவேலைகளைச் செய்துகொண்டு கடலிலே உலவுகிறாய்?” என்று கேட்டான்.

அதற்கு டியோண்ட்ஸ், “நீ எந்தத் துணிவின் பேரில் உலகத்தை அடக்கியாள முயல்கிறாய்? என்னிடம் ஒரு கப்பல் இருப்பதினால் நான் ஒரு கொள்ளைக்காரன் என்று அழைக்கப்படுகிறேன். ஆனால் உன்னிடம் மாபெரும் கப்பற்படை இருப்பதினால் நீ மாவீரன் என்று போற்றப்படுகிறாய்” என்று பதிலளித்தான்.

அலெக்சாண்டர் அதற்குப் பதிலேதும் கூறவில்லை. அவனை விடுதலை செய்துவிட்டான்.

அமெரிக்கா உலகுக்கு வழங்கிய....

எய்ட்ஸ், ஏழை நாடுகளுக்கு அமெரிக்கா தந்த பரிசு?

ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படும் ‘பிரபஞ்ச அழகி’யும், ‘உலக அழகி’யும் எய்ட்ஸ் நோய் தடுப்பு பிரச்சார நடவடிக்கையாக உலகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்வதைப் பார்க்கையில் மனம் விம்மி கண்ணீர் வருகிறது. எப்பேர்பட்ட சேவை? அதுவும் வளர்ந்த, வல்லரசு நாடுகளுக்கு பிரச்சார பயணத்தை மேற்கொள்ளாமல் மூன்றாம் உலக நாடுகளிலும், ஏழை நாடுகளிலும் மட்டுமே எய்ட்ஸ் விழிப்புணர்வு ‘சொற்பொழிவு’ ஆற்றும் அவர்களது கருணை பல கோடிகள் கொடுத்தாலும் ஈடாகாது!

உண்மையில் எய்ட்ஸ் நோய் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே ஏன் இருக்கிறது, அல்லது பரவுகிறது? அமெரிக்காவில் ஒரின காதலர்கள் தவிர வேறு யாரிடமும் எய்ட்ஸ் நோய் ஏன் தென்படவேயில்லை...?

Dr. Alan Cantwell, Jr எழுதிய Queer Blood: The secret AIDS Genocide plot புத்தகம் இதற்கான விடையைத் தருகிறது. எய்ட்ஸால் மரணமடைந்த பலரையும் பரிசோதனை செய்து டாக்டர் அலன் கான்ட்வெல் தனது முடிவை அந்தப் புத்தகத்தில் அறிவித்திருக்கிறார். ‘‘உண்மையில் எய்ட்ஸ் என்பது சோதனைச் சாலையில், மனிதர்களுக்கு எதிராக மனிதர்கள் கிருமியை உருவாக்க முடியும் என்பதற்கான ஆதாரம். இத்தகைய சோதனைகள் மூலம் வருங்கால தலைமுறையினருக்கு பேராபத்தை ஏற்படுத்த முடியும். அணு ஆயுதங்களுக்கு ஒப்பான பேரழிவை சோதனைச் சாலை உயிரியியல் கிருமிகளால் உண்டாக்க முடியும் என்பதற்கான ஆதாரமே எய்ட்ஸ்’’ என்கிறார் டாக்டர் அலன் கான்ட்வெல்.

இந்த எய்ட்ஸ் கிருமியின் உருவாக்கத்துக்கு பின்புலத்தில் இருந்தவர், அமெரிக்காவின் முன்னாள் State Secretery ஹென்றி கிஸ்சிங்கர் என்பதையும், மூன்றாம் உலக நாடுகளில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தவும், அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிறுவவும், காங்கிரஸ் பணத்திலிருந்து 10 மில்லியன் டாலர்கள் இந்த எய்ட்ஸ் கிருமியை உருவாக்க அமெரிக்க ராணுவத்துக்கு வழங்கியதையும் நாம் கவனத்தில் கொள்வதே இல்லை.

உண்மையில் புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதாக நடந்த விபரீத சோதனைதான் இன்று பரிணாம வளர்ச்சியுடன் எய்ட்ஸ் நோயாக வளர்ந்திருக்கிறது என்று கூட சுருக்கமாக சொல்லலாம்.

1964ம் ஆண்டு அமெரிக்க அரசின் நிதி உதவியோடு ‘சிறப்பு வைரஸ் புற்று நோய் திட்டம்’ (SVCP) பெத்திஸ்டாவில் தொடங்கப்பட்டது. முதலில் ரத்தப் புற்று நோய், நிணநீர் சம்மந்தமான புற்று நோய்க்கான ஆய்வாக மட்டுமே இருந்த இந்த திட்டம், பின்னர் அனைத்து புற்று நோய்க்கான ஆய்வாக விரிவு படுத்தப்பட்டது.

பல வருடகாலமாக சிம்பன்சி குரங்கின் உறுப்புகளை மனிதனுக்கு பொருத்திப் பார்க்கும் சோதனை நடந்து வந்தது. இதற்காக பூனை, சுண்டெலி, கோழி உட்பட பல விலங்குகள் ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டன. இப்படி சோதனைச் சாலையில் பரிசோதிக்கப்படும் மருந்துகள் விலங்குகளில் வேலை செய்ய ஆரம்பித்ததும் அதை மனிதர்களின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்த முற்படுவார்கள். இதற்காக அவர்கள் எந்த மனிதனிடமும் ஒப்புதலோ, அவனிடமோ அல்லது அவளிடமோ சொல்லிவிட்டோ செய்வதில்லை. இப்படி செய்யப்பட்ட சோதனைகளில் விலங்குகளை பாதிக்கும் பல வைரஸ் கிருமிகள், மனிதனையும் சென்றடைந்தன, அடைகின்றன.

கிளிண்டன் அமெரிக்க அதிபராக இருந்தபோது, 1994ல் மக்கள் ஒப்புதல் இல்லாமலேயே பல கதிர்வீச்சு தொடர்பான சோதனைகள் அமெரிக்க மக்கள் மீது நடத்தப்பட்டதை விசாரிப்பதற்காக ‘அறிவுரைக் குழு’ ஒன்றை ஏற்படுத்தினார். 95ம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் 1960 வரை நோயாளிகளின் அனுமதி இல்லாமலேயே மருத்துவர்கள் அவர்கள் மீது சோதனை நடத்தியதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

அதிர்ந்துபோன அமெரிக்க மக்கள், எதிர்ப்பு தெரிவித்தப் பின்னர், இந்த ‘சோதனை முயற்சிகள்’ மூன்றாம் உலக நாடுகளின் மீது, மேற்கொள்ள ஆரம்பித்திருக்கின்றனர். ஒவ்வொரு மூன்றாம் உலக குடிமகனும் தன்னையும் அறியாமல் பரிசோதனைக் கூடத்து விலங்காகத்தான் இருக்கிறான் அல்லது இருக்கிறாள்.

உதாரணமாக எய்ட்ஸ் நோய்க்கு காரணமான Human Immuno Deficiency Virus கூடவே Herpes virus பாதிப்பு ஏற்படுத்தி வருவதை ஆராய்ந்தால் உண்மை விளங்கும். இந்த Herpes Virus, இப்போது எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஏற்படுத்தும் Kaposis Sacoma க்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. மனிதர்களின் உடலமைப்பை பெருமளவில் கொண்டுள்ள விலங்கினங்களுக்கு, குறிப்பாக குரங்குகளுக்கு, நோய் உண்டாக்கக் கூடிய இந்த Kaposis Sacoma எப்படி மனிதர்களின் உடலுக்கு வந்தது? சோதனை மூலம் போடப்பட்ட தடுப்பூசிகளால்தானே?

AIDS கலப்படம் செய்யப்பட்ட தடுப்பூசிகளால் எய்ட்ஸ் வரும் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஹெச். ஐ. வி வைரஸ் புற்று நோயை உண்டாக்கக் கூடிய கிருமியே. இதை எய்ட்ஸ் நோய் கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ராபர்ட் காலோ, ‘‘எய்ட்ஸ் என்பது கொள்ளை நோயாக வரும் ஒருவித புற்று நோயே’’ என்று கூறியிருப்பதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இதே ராபர்ட் காலோ இன்னொன்றையும் சொல்லியிருக்கிறார்.
‘‘எனக்கு தெரிந்து அமெரிக்காவில் ஆண், பெண் புணர்ச்சிக்கு பின் ஏற்பட்ட எய்ட்ஸ் பாதிப்பு இல்லவே இல்லை. அமெரிக்க மக்களுக்கு எய்ட்ஸ் நோய் என்றுமே ஒரு பிரச்னையாக வராது’’ என்று அடித்து கூறியிருக்கிறார்.

இந்த ராபர்ட் காலோ, மருத்துவத்தை முறையாக பயின்ற மருத்துவரல்ல. அவருடைய பயிற்சி உடல் வேதியியல் மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டது. வைரஸ் கிருமி குறித்த போதிய அனுபவம் இல்லாததால் சோதனைச் சாலையில் நிகழ்ந்த பல கலப்படங்களுக்கு காரணமாக இருந்திருக்கிறார்... என்று வரும் செய்திகள் அதிர வைக்கின்றன.

ரத்தம் மூலமும், உபயோகிக்கப்பட்ட சிரிஞ் மூலமும், பாலியல் தொழிலாளர்களுடன் இணைவதாலும் எய்ட்ஸ் வரும்... என எல்லோருமே நம்புகிறோம். இப்படி நம்பவைத்தே ஆணுறைகளின் விற்பனையையும் அதிகரித்திருக்கிறோம். ஆனால் மேற்சொன்ன காரணங்களால் எய்ட்ஸ் வருவதற்கான வாய்ப்புகள் குறைவுதான்.

வயிற்றில் புண் இருக்கிறதா என அறிய உதவும் என்டோஸ்கோபி மூலம் பரவும் எய்ட்ஸ் பற்றியோ, அறுவை சிகிச்சையினாலும், குழந்தை பிறப்பு & பெண்களின் உடல் சார்ந்த பிரத்யேக பிரச்னையினாலும், ரத்தக் குழாய் வழியாக பரிசோதனை மேற்கொள்வதில் பயன்படுத்தப்படும் உபகரணங்களால் பரவும் எய்ட்ஸ் பற்றியோ எத்தனை பேருக்கு தெரியும்? பெருமளவு எய்ட்ஸ் நோய் இவைகளால்தான் வருகின்றன என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை.

1970களில் அமெரிக்க ஒரின காதலர்களிடையே மஞ்சள் காமாலை தடுப்பூசி போடப்பட்டது. அந்த தடுப்பூசியில் இருந்த வைரஸ் கிருமியால்தான் அவர்களுக்கும், அவர்களுடன் இணைந்தவர்களுக்கும் எய்ட்ஸ் நோய் வந்தது, பரவியது என்பது கண் கூடான உண்மை. அதேபோல பெரியம்மை ஒழிப்புத் திட்டத்தின் மூலம், ஆப்பிரிக்காவிலுள்ள பல கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகே ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் பரவ ஆரம்பித்ததையும் கருத்தில் கொள்வது நல்லது. 1970களுக்கு முன் அமெரிக்காவிலும், ஆப்பிரிக்காவிலும் எய்ட்ஸ் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பலவீனமாக இருப்பதை கருத்தில் கொண்டால் உண்மை புரியும்.

ஒருவேளை சோதனைச் சாலையில் வெற்றிகரமாக எய்ட்ஸீக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அடுத்ததாக வேறு ஏதேனும் ஒரு புதிய உயிர் கொல்லி நோய் உற்பத்தியாகி பரவ ஆரம்பிக்கும். இந்த புதிய நோயும் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமே மையம் கொள்ளும்.

ஆறறிவுள்ள விலங்குகள் மலிவாக வேறெங்கே கிடைக்கும்?

புகை பிடிப்பதால் பல நன்மைகள்


புகை பிடிப்பது கேடு என்று நன்றாகத் தெரியும். ஆனால், அந்த கேடு தனக்கு வந்து சேரும் வரை தன்னை சிகரெட் ஒன்றும் செய்யாது என்று தான் நினைப்பார்கள். புகை பிடிக்கும் ஒருவரிடம் புகை பிடிப்பதால் உண்டாகும் தீமையை எவ்வளவு எடுத்து சொன்னாலும் எந்த பலனும் உண்டாவதில்லை. எனவே புகை பிடிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.

 தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைக்காரர்கள், பீடி, சிகரெட், தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள், புகையிலை உற்பத்தியாளர்கள் குடும்பத்துக்கு உணவு கிடைக்கும். இதனால் பிறருக்கு உதவும் சந்தோசம் கிடைக்கிறது.

 சிகரெட்டுகள் மீது விதிக்கப்படும் கணிசமான வரியால் நாட்டுக்கு நன்மை.

 சிகரெட் நெடியால் மோப்ப சக்தி குறைந்து போவதால் சுற்றுப்புறத்தின் எந்த நாற்றமும் மூக்கை உறுத்தாது. வீட்டு சாப்பாட்டில் குறையிருந்தாலும் ஒன்றும் பெரிதாகத் தெரியாது.

 சிகரெட்டைக் கொடுத்து, வாங்கி நட்பை வளர்த்துக் கொள்ளலாம். முன் பின் தெரியாதவர்களுடன் கூட தீப்பெட்டி கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.

 எப்போதும் தீப்பெட்டி அல்லது லைட்டர் வைத்துக் கொண்டிருப்பது இரவு மின் வெட்டு ஏற்படும் போது மிக உதவியாக இருக்கும்.

 சுற்றி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத் தொல்லை அதிகம் இருக்காது. சிகரெட் தயாரிப்பாளர்கள் புகையிலையுடன் கொசு மருந்தையும் கலந்து தயாரித்தால், தனியாக கொசுவர்த்தி வாங்கும் செலவு மிச்சம்.

 பிரச்சனைகள் வந்தால் டென்சனே தேவையில்லை. ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால் போதும். சிகரெட்டை பற்றவைத்து ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகை போல் ஊதித் தள்ளுவதை போல் கற்பனை செய்யலாம்.

 லொக் லொக்கென்று இருமி மற்றவர்களின் அனுதாபத்தை, கவனத்தை தன் பக்கம் இழுக்கலாம்.

 அதிகம் சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமைத் தோற்றம் வந்துவிடும். முதியவர் என்றால் அதற்குரிய மரியாதையும் கவுரவுமும் எளிதில் கிடைக்கும். பஸ்ஸில் இடம் கிடைப்பது கூட எளிது.

 தொடர்ந்து புகைப்பதால் சீக்கிரமே உடல் தளர்ந்து கைத்தடியுடன் நடக்கும் நிலை ஏற்படும். துரத்தும் தெரு நாய்களை விரட்ட உதவும்.

 இரவு முழுதும் இருமிக் கொண்டிருப்பதால் வீட்டில் திருடர்கள் வரும் பயமில்லை. வேறு தனியாக நாய்கள் வளர்க்க வேண்டியதில்லை.

 வாய் துர்நாற்றத்தை புகை நாற்றத்தால் எளிதில் மறைத்து விடலாம். எப்போதும் புகை அடித்துக் கொண்டிருப்பதால் வாய் மற்றும் நுரையீரல்களில் உள்ள கிருமிகள் செத்துப்போகும் அல்லது வேறு இடம் பெயர்ந்து போய்விடும்.

 புகை பிடித்து கேன்சர் வந்து படும் அவஸ்தையைப் பார்க்கும்போது பிள்ளைகள் அதற்கு எதிராக வைராக்கியம் எடுத்துக் கொண்டு அதன் பக்கமே போகாமல் நல்ல பிள்ளைகளாக வளர உதவும்.

 சிகரெட் பிடிப்பதில் பல ஸ்டைல்களை கற்றுக் கொள்வது சினிமாத் துறையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரலாம்.

 வாழ்வின் பிற்பகுதியில் டாக்டர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அள்ளி அள்ளி தந்து வள்ளலாகலாம்.

 நாட்டின் பொறுப்பற்ற மக்களின் ஆயுளைக் குறைத்து மக்கள் தொகை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது.

Nice Story


Once there was a king who received a gift of two magnificent falcons from Arabia. They were peregrine falcons, the most beautiful birds he had ever seen. He gave the precious birds to his head falconer to be trained.

Months passed and one day the head falconer informed the king that though one of the falcons was flying majestically, soaring high in the sky, the other bird had not moved from its branch since the day it had arrived.

The king summoned healers and sorcerers from all the land to tend to the falcon, but no one could make the bird fly. He presented the task to the member of his court, but the next day, the king saw through the palace window that the bird had still not moved from its perch. Having tried everything else, the king thought to himself, "May be I need someone more familiar with the countryside to understand the nature of this problem." So he cried out to his court, "Go and get a farmer."

In the morning, the king was thrilled to see the falcon soaring high above the palace gardens. He said to his court, "Bring me the doer of this miracle."

The court quickly located the farmer, who came and stood before the king. The king asked him, "How did you make the falcon fly?"

With his head bowed, the farmer said to the king, " It was very easy, your highness. I simply cut the branch where the bird was sitting."
We are all made to fly-- to realize our incredible potential as human beings. But instead of doing that, we sit on our branches, clinging to the things that are familiar to us. The possibilities are endless, but for most of us, they remain undiscovered. We conform to the familiar, the comfortable, the mundane. So for the most part, our lives are mediocre instead of exciting, thrilling and fulfilling.

Wednesday, April 6, 2011

Information About Mobile Text messaging









Incredible reality of Nature...



All Ladybugs have either two, nine, or fifteen spots.

On a breezy summer day, a mature Maple can use over 40 gallons of water per hour.

Scientists estimate that there are at least 200 million times more Insects than people.

Some Hummingbirds weigh less than a U.S. Penny.

One-half of the world's population cooks with wood or charcoal.

One species of earthworm in Australia can grow up to 10 feet in length.

Orchids are the largest family of flowering plants with approximately 35,000 species.

Strawberries are actually part of the rose family, and are the only fruit with their seeds on the outside.

If everyone in the U.S. recycled their Sunday newspaper, it would save 500,000 trees every week.

Each year Americans send 24 million tons of lawn clippings, leaves, and shrub cuttings to landfills.

In so doing, it takes up about 20 percent of our landfill space.

Seventy percent of all water used by humans worldwide is for irrigation.

Seventy-six percent of Americans consider themselves Environmentalists!